Monday, May 08, 2006

இட்லி வடையில் நான் இட்ட பின்னூட்டம்

பொதுவாகவே நல்ல ஆட்சி அமைப்பது , அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்துவது என்பது கடினமான காரியமாகவே உள்ளது. இதற்கு காரணம் சட்டமன்ற உறுப்பினர்களின் மோசமான செயல்பாடு. ஜெயலலிதா அரசு நிர்வாகத்தை ஒரளவு வெற்றி கரமாக முடுக்கி விட்டது போல, சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரு விரட்டு விரட்டி இருந்தால் மிக எளிதாகவே ஆட்சியை பிடித்து இருக்கலாம். யானைக்கு செலவிட்ட காசை மக்களுக்கு அவர் பயன்படுத்தி இருக்கலாம்.

கருணாநிதி இந்த முறை வெற்றி பெற்றாலும், தேர்தல் அறிக்கையில் அவர் விட்ட வாக்குறுதிகள் தி.மு.கவை மிக கடுமையாக பாதிக்கும். இவற்றை நிறைவேற்றாமல் போனால் தி.மு.க விற்கு நிரந்தரமாக பாதிப்பு உண்டு. எப்படி பார்த்தாலும் அ.தி.மு.க வின் எதிர்காலம், தி.மு.கவை விட பிரகாசமாகவே உள்ளது.

இந்த தேர்தலின் பலியாடு ம.தி.மு.க ஆக இருக்கலாம். பா.ம.க இரண்டு தரப்பு மாறி மாறி சென்றாலும், இரண்டு தரப்புக்கும் அது இயற்கையான சாய்ஸ் ஆக உள்ளது. காரணம் அது சீட் மட்டுமே அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைக்கின்றது. அதை ராமதாஸ் வெளிப்படையாகவுன் கூறுகிறார். ஆனால் கொள்கை முழக்கம் விட்டு பின்னர் தாவும் வைகோவின் நிலைமை மிக பரிதாபம்.


தி.மு.க வின் வெறுப்பை சம்பாதித்து விட்டார். அ.தி.மு.கவோ , ம.தி.மு.க வினால் பிரயோஜனம் இல்லை என்ற நிலைமையை அடைந்து விட்டது. இனிமேல் ம.தி.மு.க விற்கு 23 சீட் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த முறை தனித்து போட்டியிட்டு ஸ்டார் அந்தஸ்து பெறுபவர் விஜயகாந்த் அவர்கள்.

இவர் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றால் , அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் மீது மீடியா தனியாக கவனம் செலுத்தும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. சுயேச்சைகள் அல்லது சிறு கட்சிகள் வெற்றி பெறுவது இது முதல் முறையாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இல்லாத ஒரு அட்வான்டேஜ் விஜயகாந்திற்கு உள்ளது. திருனாவுக்கரசர், தாமரைக்கனி , அப்பாவு, வெங்கடசாலம் போன்றவர்கள் தமிழக அளவில் பாப்புலாரிட்டி இல்லாதவர்கள். ஆனால் விஜயகாந்திற்கு அப்படி இல்லை. தமிழக அளவில் அவருக்கு அறிமுகம் உள்ளது. (இது தான் மற்ற அ.தி.மு.க தலைவர்களிடம் இல்லை. ஜெயலலிதாவிடம் இருந்தது எனவே தான் அவர் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் விஸ்வரூபம் எடுக்க முடிந்தது.) அதனை அவர் நன்கு பயன்படுத்த கூடும். இது வரை அவர் செயல் பட்ட விதம் த.மா.க வை மூப்பனார் கையாண்ட விதத்தை விட சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் இந்த முறை வெற்றி பெறுவாரா?. விருத்தாசலம் அவர் எடுத்த ஒரு சற்று அதிக படியான ரிஸ்க் என்றே தோன்றுகிறது. ஒரு நல்ல வாய்ப்பினை விஜயகாந்த் இழந்து விட்டாரோ என்றே தோன்றுகிறது.

Thursday, May 04, 2006

தேர்தல் - 2060.

ஆராய்ச்சியாளர்கள் பெட்டியை தோண்டி எடுக்கிறார்கள். உள்ளே இருந்து வெளிவருகின்றனர் துக்ளக்கும் பதூதாவும்.

ஆராய்ச்சியாளர்கள்:
ஆகா, ஆகா, துக்ளக் கிடைத்து விட்டார்!!!!!.
துக்ளக்: நீங்கள் எங்களை தோண்டி எடுப்பீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
எப்படி தெரியும்?
ஒரு விஷயம் நடந்த பின்னர், இது எனக்கு முன்னாடியே தெரியும் என்று கூறுவது நான் கடைபிடிக்கும் வழக்கம். எனது மந்திரிகளை கூப்பிடுங்கள்.

உங்கள் மந்திரிகளா?. ஐயா, இது இப்போது ஜனநாயக நாடு. இப்போது பல கட்சிகள் இருக்கு. எல்லாரும் சேர்ந்து ஒரெ ஒரு கூட்டணி அமைத்து விட்டார்கள். அவர்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கம் அமைப்பார்கள். இது தான் ஜனநாயகம்.

ஜனநாயகம் என்றால் மக்கள் அல்லவா தேர்ந்த்தெடுக்க வேண்டும்?

அதெல்லாம் ரொம்ப பழைய கதை. அதுனால கட்சிகள் ரொம்ப சிரம பட்டு போயிட்டாங்க. கட்சியாட்கள திருப்தி படுத்தணும். ஜாதி பார்த்து ஆளை நிறுத்தணும். வோட்டு போடவே வராத மக்கள் வேற் இருக்காங்க. வோட்டு போடுற ஆட்கள திருப்தி படுத்தணும். சினிமா காரங்க பின்னாடி ஒடணும். இதேல்லாம் ஒவ்வோரு தேர்தலுக்கும் பண்ணணும். கடைசிலா பார்த்த லாபம் கம்மியா போச்சு எல்லாருக்கும். அதனால் ஈஸ்பின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மாதிரி கூட்டணி அமைச்சு சட்ட திட்டத்தை மாற்றி விட்டார்கள்.

என்னவென்று?

இனிமே எல்லா கட்சி தலைவர்களும் சேர்ந்து சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.அது தான் தேர்தல். அது தான் இப்ப நடக்க போவுது?


இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

எங்க சார், அவங்களே நிறைய பேர் ஜாதி, மதம் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க. முன்னேறினவுங்க மத்தவுங்கள பத்தி கவலை படறது இல்லை. எல்லாத்துக்கும் மேல ரொம்பவும் ஒண்ணும் வித்தியாசம் இல்ல. அவங்க முன்னாடி ஒட்டு போட்டாங்க. இப்ப அதுவும் இல்லை. நிறைய பேருக்கு வேலை இல்லாம போச்சு. தலைவர்களும் ஊரு ஊரா சுத்தாம நிம்மதியா ஓய்வு எடுத்து கிட்டு இருக்காங்க. உள்ளுர் பிரச்சினை, அயல்நாட்டு பிரச்சினை இது எதுலயும் எந்த கருத்தும் சொல்றது கிடையாது.

-என்னது நாங்க தேர்தல்ல போட்டி இடலாம், பிரதமராக ஆகிடலாம்னு பார்த்தா அது முடியாது போல இருக்கே..

என்ன சார் நீங்க, இன்னமும் எந்த காலத்திலயோ இருக்கிங்க.

இதை நான் மாற்ற வேண்டும். மாற்றுவேன்.பதூதா, உடனடியாக ஏதேனும் யோசனை கூறு?

அரசே , ரொம்ப எளிது. இந்த தலைவர்களும்,மக்களும் புகழ்ச்சிக்கு மயங்கும் முட்டாள்கள். ஒவ்வொரு கட்சி தலைவரிடமும் சென்று , நீங்கள் தனியாகவே வெற்றி பெறலாம். நீங்கள் யாரையும் நம்மி இல்லை. 2006 தேர்தல் முறையை கொண்டு வந்து நீங்கள் மட்டும் ஆட்சியில் இருங்கள் என்று கூறுங்கள். இதை எல்லா தலைவரும் நம்புவார்கள். இதை சில நடிகர்களும் நம்புவார்கள். 2006 முறை திரும்ப வரும்.


2006 முறை திரும்ப வரும்.ஆனால் நாம் வெற்றி பெறுவோமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று கூறுங்கள்.

மக்கள் அதனை நம்ப மாட்டார்கள். மேலும் நம்மை முட்டாள் என்று கூறுவார்கள்.

1 ரூபாய்க்கு பெட்ரோல், 50 பைசாவிற்கு அரிசி, எல்லாருக்கும் இலவச செல்போன், படித்தவர்களுக்கு வேலை, படிக்காதவர்களுக்கும் வேலை, பெண்கள் , ஆண்கள் , அனைத்து ஜாதி மக்களுக்கும் இட ஒதுக்கீடு என்று கூறலாம்.

நன்றாக உள்ளது. ஆனால் இது போதாது. அதிரடியாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம்?
100 கோடி மக்களையும் வெளிநாட்டுக்கு அனுப்புவேன். எல்லாரும் வெளிநாட்டுக்கு போய் நிம்மதியாக இருங்கள் என்று வாக்குறுதி கொடுக்கலாம். மக்கள் இதை நம்புவார்கள்.

கொஞ்சம் பரவாயில்லை. இன்னமும் நிறைய அழுத்தமாக சொல்.
எல்லா பெண்களுக்கும் பட்டு சேலை, 10 பவுன் நகை என்று அறிக்கை விடுங்கள்.

துக்ளக் வென்று ஆட்சி அமைக்கிறார்.

Tuesday, May 02, 2006

பதிவுகளை வகைரீதியாக தொகுக்கும் முயற்சி


ப்ளாக்கரில் வகைரீதியாக பதிவுகளை தொகுத்து காட்ட நேரடியான வசதிகள் இல்லை. எனவே நான் அதற்காக முயற்சித்தேன். இன்னமும் முயற்சி இன்னமும் முழுமையாக இல்லை. தற்போதைய சில பதிவுகளை மட்டும் வகைபடுத்தி உள்ளேன். நிறைய பதிவுகள் இருப்பதனால் வகைபடுத்த நிறைய நேரம் ஆகும் ஏனெனில் நான் ஒவ்வொரு பதிவிலும் அது எந்த வகையை சேர்ந்த்தது என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.
தற்போதைய பீட்டா வெர்ஸனை பாருங்கள்.

இப்போது ஒரளவு வெற்றி கரமாக வந்துள்ளது. ஹோம் பேஜில் மட்டும் இந்த வசதி உள்ளது. வகைபடுத்த பட்டுள்ள பதிவுகள் சரியாக டிஸ்ப்ளே செய்ய படுகின்றன.

http://bunksparty.blogspot.com