Tuesday, January 31, 2006

உண்மையிலே உரிமை இழந்தவர்கள்

மனித உரிமைகள் , மிருக உரிமைகள் உண்மையிலே உரிமை இழந்தவர்கள்.
வீரப்பன் கொல்ல பட்ட சமயத்தில் இருந்தே மனித உரிமைகள் கழங்கள் பல பிரச்சினைகளை கிளறி கொண்டு இருக்கின்றன. இவர்களுக்கு மீடியாவும் மிகுந்த உதவி செய்து கொண்டு வருகிறது.உண்மையிலே அதிரடி படையால் பாதிக்க பட்ட தமிழர்கள் பலர் மைசூரில் வாடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. பல காரணங்களுக்காக சாதாரண மனிதர்கள் அரசாங்கத்தால் பாதிக்க பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அநாதையாக நிற்கிறார்கள்.
ஆனால் இன்று வீரப்பனுக்காக பல இயக்கங்கள் குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்லுகிற வாதம் வீரப்பன் குற்றவாளி ஆனதற்கு காரணம் சமுகம். எனவே வீரப்பனை கொன்றது அநீதி. என்கவுண்டர்கள் செய்வது தவறு. நீதி மன்றங்கள் மட்டுமே தண்டிக்கும் அதிகாரம் படைத்தவை.
எந்த வகையிலும் இரக்கம் காட்ட கூடாத கிரிமினல்கள், தீவிர வாதிகள் இவர்களுக்காகவே மனித உரிமை குரல்கள் எழுவது வேடிக்கை கலந்த வேதனையாக உள்ளது. ரோட்டில் போகிற நாய்க்காக குரல் கொடுக்க இயக்கங்கள் உள்ளன. அந்த நாய்களால் பாதிக்க படுபவர்களை பற்றி கவலை பட ஆளில்லை. அதிகாரம் இருப்பவர்கள் (மேனகா காந்தி)தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கொண்டு சட்ட திட்டம் தீட்டுவதினால் வருகின்ற கொடுமை இது. இது உண்மையில் ஜனநாயக நாடு தானா? நாய்கள் மக்களை காட்டிலும் முக்கியமாக காப்பற்ற பட வேண்டியவையா?

Monday, January 30, 2006

தெய்வம் தந்த வீடு

பாடல்களில் வார்த்தை மறைந்தற்கு காரணம் என்ன?
தமிழ் கவிஞர்கள் பாடல்களில் வார்த்தைகள் தெளிவாக வரவேண்டும் என்று வலியுறுத்துவது இல்லையா?. அல்லது அவ்வாறு வலியுறுத்தும் வலிமை அவர்களுக்கு இல்லையா?. அல்லது இவர்கள் உண்மையில் தமிழ் மீது வைத்திருக்கும் பாசம் இவ்வளவு தானா?

வாழ்க்கையில் எல்லாரும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தான் வாழ்கிறோம். சகித்து கொண்டு போவது எல்லா இடத்திலும் நடக்கின்ற ஒன்றாக தான் உள்ளது. அவ்வாறு வாழாதவர்களை அதிகாரம் சகித்து கொண்டு போவதில்லை.இதற்கு அஞ்சியே எல்லோரும் விலை போகிறோமா? உணர்வுகளை பூட்டி வைத்து கொண்டு புளுங்கும் சராசரி மனிதர்கள் போல இந்த சினிமா கவிஞர்களுக்கும் புளுக்கங்கள் இருக்குமா?

நல்ல கதையொட்டி பாடல் எழுத முடியாமல் வெறும் பிம்பங்களாகிய கதாநாயகர்களை பாராட்டும் போது அவர்களுக்கு எங்கிருந்து கற்பனை வருகிறது?. மனதில் உண்மையான வீரர்களை, கதாநாயகர்களை நினைத்து கொண்டு எழுதுவார்களோ?

பழங்காலத்திலும் புலவர்கள், அரசர்களை புகழ்ந்து பாடி பரிசு பெற்று வாழ்ந்தது வரலாறு. அது தான் இன்றும் வேறு உருவில் தொடர்கிறதா? அதிரடி இசையும், பொருத்தமில்லா சூழ்நிலைகளும், வரண்டு போன கதாநாயகர்களை வைத்து பாடல் எழுதுவதே பெரிய விஷயம் ஆக தோன்றுகிறது.கண்டிப்பாக கவிஞர்கள் எதற்காக வந்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறியிருக்காது.

"அவர்களில்" ஜெய்கணெஷ் வீட்டை விட்டு துரத்த படுவார். நடுவீதியை "தெய்வம் தந்த வீடு " என்று வர்ணித்து அவர் பாடுகிற பாட்டு நல்ல கற்பனை. அந்த பாடல் நல்ல கற்பனையும் கூட. இன்றைய நிலையில் தமிழ் பாடல்கள் "தெய்வம் தந்த வீட்டுக்கு சென்று விட்டனவோ?

Sunday, January 29, 2006

மனதிற்கு சொல்ல வேண்டிய செய்தி

எல்லா இடத்திலும் நான் முதலாக வருவேன். எனக்கென்று நான் ஒரு தனி முத்திரை பதிப்பேன். மேலும் மேலும் வலிமையை நோக்கி செல்வது என்னுடைய தாகம். அனைத்திலும் தரம் துல்லியமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய அவா.

இது தான் நீங்கள் உங்கள் மனதிற்கு சொல்ல வேண்டிய செய்தி. இதை தினந்தோறும் காலையிலும் இரவிலும் உங்கள் மனதிற்குள் சொல்லுங்கள். இதை அழுத்தமாக கடைபிடிக்க வேண்டிய உறுதி உங்களிடத்தில் இருக்க வேண்டும்.

தைரியம் மிக்க, வலிமை மிக்க சிங்கமாக வாழ உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வோரு நரம்பிலும் துடிப்பு மிக்க எண்ணங்களை நீங்கள் ஏற்ற வேண்டும். உங்கள் நடை உடை மற்றும் பாவனை, பேச்சு என்று அனைத்திலும் எப்போதும் எதற்கும் கலங்காத தன்னம்பிக்கை வெளிப்படவேண்டும்.


இது தான் ஜனநாயகமா?

ஏற்கனவே நான் எழுதிய 0+15 என்பது 25 க்கு குறைவு கணக்கு சரியா என்ற பதிவினை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டு கிண்டல் அடித்தனர்
ஆனால் இப்போது குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுவிட்ட நிலைமையில் மீண்டும் நமது ஜனநாயக தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளை காண்பது அவசியமாகின்றது.

கர்நாடகாவில் தனி பெரிய கட்சியான பா.ஜ.க இன்னும் ஒரு முறை கூட முதல்வர் பதவியை எட்டவில்லை. இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரசு மூன்றாவது கட்சியான ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இப்போது அந்த அரசை கவிழ்த்து விட்டு மூன்றாவது பெரிய கட்சி , பா.ஜ.க உதவியோடு ஆட்சி அமைத்துள்ளது. இன்ன்மும் 20 மாதம் சென்று பா.ஜ.க ஆட்சி பீடத்தில் அமருமாம். அப்படி உண்மையில் நடந்து விட்டால் தனி பெரிய கட்சி, இரண்டாம் பெரிய கட்சி, மூன்றாம் பெரிய கட்சி என்று அனைவரும் ஆட்சி பீடத்தை தொட்டிருப்பார்கள். இது தான் ஜனநாயகமா? இது தான் பெரும்பான்மை மக்கள் கருத்தா?.
பெரும்பான்மை மக்க்கள் கருத்தினை நாம் சரியான முறையிலே அளவிடுகிறோமா? தொகுதி வாரியாக தேர்தல் நடை பெறுகிறது. ஆனால் எல்லா தொகுதியிலும் மக்கள் தொகை ஒரே அளவிலா உள்ளது?கூட்டணி அமைத்து கொண்டு இந்த கட்சிகள் ஜனநாயகத்தை எக்ஸ்ப்லாயிட் பண்ணுகின்றன.
சற்று எளிமையாக இல்லாவிட்டாலும் ஒட்டு விகிதத்திற்கு நேர் விகிதத்தில் கட்சிகளுக்கு சீட்கள் அளிக்க பட வேண்டும். இது கூட நூற்றுக்கு நூறு சரி என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது இருக்கிற முறைக்கு இது எவ்வளவோ பெட்டர். இதன் மூலம் பா.ம.க மற்றும் ம.தி.மு.க போன்ற பொடியன்கள் அதிக முக்கிய துவம் பெறுவது தவிர்க்க படும். அது தான் உண்மையான ஜனநாயகம். தமிழகத்தில் அ.தி.மு.க ஒரு இடம் கூட இல்லாமல் இருக்க காஙிரசு , ம.தி.மு.க. , பா.ம.க மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவை 25 சீட்கள் பெறுகின்ற குளறுபடிகளை தவிர்க்க முடியும்.


மனவலிமை பெற சில வழிகள்.

1. தினமும் 10 நிமிடம் உங்களை வலிமை மிக்க எதற்கும் அஞ்சாத சிங்கமாக கருதுங்கள்.2. தினமும் 10 நிமிடம் உங்களை சக்தி வாய்ந்த ராட்ச்ச கடல் அலையாக கருதுங்கள்.3. மனதினை ஒருமுக படுத்த முனைப்பு கொள்ளுங்கள்.4. விவேகானந்தரின் அறிவுரைகள படியுங்கள்.5. மனவலிமை பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொள்ளுங்கள்.

மண்டை கனம் புடித்தவர்களை மட்டம் தட்டுவது எப்படி?

பொதுவாகவே மண்டை கனம் புடிச்சவங்களால, அடி வாங்கி கிட்டு அழுகிற கோஷ்டிகள் நிறைய. ஆனால் இந்த மாதிரி கோஷ்டிகளை மிக சாதரணமாக மட்டம் தட்டி விடலாம் நீங்கள் மட்டும் தயாராக இருந்தால்.
1. முதலில் நீங்கள் புண்படுவதை நிறுத்தங்கள். என்னடா இது நம்மள கேவலாம பேசறானே என்று புலம்புவதை நிறுத்துங்கள். இது தான் உங்களுடைய ரியாக்ஷன் என்றால், மண்டை கனம் புடிச்ச்வுங்களுக்கு நீங்க பலியாவதை தடுத்து நிறுத்த முடியாது. எதுக்கும் மிரள கூடாது.
2. என்ன நடந்தாலும் தலைய குனியாதிங்க.... எப்பவும் நான் தான் உயர்ந்தவன். நான் தான் சிறப்பானவன். நான் தான் முக்கியமானவன் என்ற எண்ணங்களின் அடிப்படையில் தான் நீங்கள் செயல் பட வேண்டும்.
3. எல்லாவற்றிக்கும் மேலாக திருப்பி அடிபதை போல ஒரு வலிமையான ஆயுதம் எதுவும் கிடையாது. மண்டை கனம் புடிச்சவுங்களை நீங்க போடுற பொடுல அவனுக உங்களை பார்த்து புலம்பணும் - என்னா திமிர் பிடிச்சவனா இருக்கான்னு.. இந்த மாதிரி நீங்கள் அந்த கோஷ்டியை உணர வைக்கலாம். இதை குறிக்கோளால வைத்து கொள்ளுங்கள் - நீங்கள் வெற்றி அடைவீர்கள்.
4. இதை மண்டை கனம் பிடிச்சவுங்க கிட்ட மட்டும் பயன்படுத்துங்க .. மத்தவுங்க கிட்ட வேணாம்.

திண்டிவனம் ராமமூர்த்தி.

வரும் தேர்தலில் தி.மு.க எங்களை அரவணைத்து சென்றால் தான் வெற்றி பெற முடியும். காங்கிரஸ் தயவு இல்லாமல் எந்த கொம்பனும் ஆட்சிக்கு வர இயலாது: இவ்வாறாக வீர முழக்கம் முழங்கியிருப்பவர் திண்டிவனம் ராமமூர்த்தி.
1.மற்றவர்கள் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் மட்டும் ஜெயித்து விடுமா?. இவ்வாறு வீரமுழக்கம் செய்யும் திண்டிவனம் தனியாக நின்று ஜெயிப்பாரா?. எதற்காக காங்கிரஸ் பிச்சை எடுக்க வேண்டும்?
2. காங்கிரஸ் கட்சிக்கு விழுகின்ற வோட்டுக்கள் காலம் காலமாக விழுபவை. அதனை வளர்க்க இந்த தலைவர்கள் என்ன செய்து வருகின்றார்கள்?.
இந்த வயதிலும் போராடும் கலைஞர்,தனியாளாக போராடும் ஜெயலலிதா, புதியதாக கட்சி துவங்கியுள்ள விஜயகாந்த் அனைவரும் உண்மையில் கட்சியை வளர்க்க ,புதுப்பிக்க , பாதுகாக்க போரடுகிறார்கள் கடுமையாக. காங்கிரஸ் தலைவர்கள் காலர் கசங்காமல், கூட்டணி முதுகில் ஏறி வெற்றி பெறுகிறார்கள். இதில் என்ன வேட்டி சவால்கள்?. இவ்வளவு முழக்கம் இடுகிற காங்கிரசு தனியாக நிற்க வேண்டியது தானே? அப்பொது தெரியுமே இவர்கள் செல்வாக்கு என்னவென்று...

குளிர் தேசத்து அனுபவங்கள்.

கனடாவில் மான்ட்ரியால் மிக கடுமையான குளிரான ஊர். நீங்கள் இங்கு மிக சிரமபட நேரும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த மாதிரி எந்த கடினமும் நான் உணரவில்லை. சிரமபட வில்லை. ஆனாலும் ஸ்வெட்டர் போட்டு கொண்டு, கனமாக காலணி அணிந்து கொண்டு ஊர் சுத்துவது சுகமானதாகவே உள்ளது.
நம்மூர் சாப்பாடு என்றால் வட இந்திய உணவங்கள் மட்டுமே அதிகம். நான் அமெரிக்காவில் இருந்த போதும் கவனித்த விஷயங்களில் ஒன்று. வட இந்திய உணவகங்கள் மட்டுமே அதிகம். தென் இந்திய உணவு வகைகள் அங்கு கிடைப்பினும் நன்றாக இல்லை. ஏன் தென் இந்திய உணவகங்கள் அதிகம் காணபடுவது இல்லை. இத்தனைக்கும் தென் இந்தியர்கள் நிறையவே அங்கு உண்டு.
ஒரு வேளை தென் இந்தியர்களுக்கு அடுத்த நாட்டில் தொழில் துவங்கும் எண்ணம் குறைவோ? நல்ல தென் இந்திய உணவகம் ஒன்று ஆரம்பிக்க பட்டால் அது மிக பெரிய வெற்றி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
காபி, டீ, இட்லி, தோசை இருந்தால் மட்டுமே உள்ள கடையாக இருந்தாலும் நல்ல வெற்றி காணும். ஒரு குளிர் தேசத்தில் நல்ல டீ அல்லது காபி சாப்பிட முடியவில்லை என்பது ஒரு கடுப்பு. ஒரு வேளை நாடு திரும்பிய உடன் ரொம்ப மாறுதலாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

22 மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர்.

மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்ய பட்டுள்ளது. இந்த முறை காங்கிரசு 20 மந்திரிகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளை காங்கிரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது நடந்து முடிந்த மாநாட்டில் காங்கிரசு கூட்டணி கட்சிகள் பொறுப்பான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என கண்டிப்பான தொனியில் கூறியுள்ளது.
காங்கிரசு கட்டுபாட்டை எடுக்க விரும்புகிறதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. அடுத்த முறை அல்லது இடை கால தேர்தல் வந்தால் கூட காங்கிரசு தற்போதைய சீட்களை விட கூடுதலாக பெறும் என்ற நம்பிக்கை அதற்கு வந்துள்ளது. மிக நிதானமாக ஆனால் அழுத்தமாக ராகுல் அடுத்த தலைவராக அடையாளம் காட்ட பட்டு விட்டார்.
இத்தனை மந்திரிகள் தேவையா ? நாட்டுக்கு தேவை படாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கு தேவை. அதுவே மந்திரி சபை விரிவாக்கத்திற்கு காரணம்.

பின்னூட்டங்களை கண்காணிப்பது.

எழுதுவதற்கு இணையாக அதற்கும் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் பின்னூட்டங்கள் பதிவில் இடம் பெற காலதாமதம் ஆகி விடும். எனவே உடனடியாக பின்னூட்டங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
முன்பு ஒவ்வோரு முறை பதிவுக்கு செல்லும் பொது ஒரு சின்ன சின்ன சஸ்பென்ஸ் காத்திருக்கும். ஆனால் இப்போது மெயிலில் பின்னூட்டம் வருவது அந்த மாதிரி உணர்வுகளை தூண்டுவதில்லை. அது மட்டும் இல்லாமல் பின்னூட்டம் இடுபவரும் காத்திருக்க வேண்டியுள்ளது.
அதற்காக கட்டுபாடுகளை நான் குறை கூற விரும்பவில்லை. ஏனெனில் அவை தவிர்க்க முடியாமல் போய் விட்டன. எல்லாம் இந்த் போலிகளினால் வந்த விளைவு. இவர்கள் செய்கின்ற கூத்துக்கள் சகிக்க முடியாமல் போனதால் இந்த மாதிரி கட்டுப்பாடுகள். அதனால் அனைவரும் இன்னும் சிறிது நேரம் செலவிட வேண்டியுள்ளது. காலம் பொன் போன்றது. இதனை போலிகள் வீணடிப்பது மட்டுமில்லாமல் எங்கள் நேரத்தையும் சேர்த்தே பாழடிக்கிறார்கள்.

அதிரடியான ஆரம்பம். ஆனாலும் தடுமாற்றம்.

இந்த மாதிரியான ஆரம்பத்திற்கு அப்புறமும் பாகிஸ்தான் 245 அடிக்குறதுக்கு காரணம், உண்மையான ஆல்ரவுண்டர்கள் அங்கே நிறைய. இத்தனைக்கும் இன்சமாம் ஆடவில்லை. இந்தியா லக்ஷ்மணை கொண்டு ஆட்டத்தை துவக்கியது ஒரு விதமான ஏமாற்றமே. வழக்கம் போல சேவாக் துவங்கியிருக்கலாம். அல்லது புதுமை புகுத்த விரும்பினால் பதான் அல்லது தோனியை வைத்து அதிரடி ஆட்டம் ஆரம்பித்திருக்கலாம். ஆனால் சேவாக் பின்னால் தள்ள பட்டது தன்னம்பிக்கை இல்லாத முடிவே.
எனினும் கங்குலிக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு. ஒரு நாள் போட்டிகளில் அவர் ஆட போவதில்லை என்ற அறிவிப்பு வந்த சூழ்நிலையில் அவருக்கு 5 நாள் போட்டிகளில் தன்னுடைய இடத்தை இருக்கமாக பற்றி கொள்ள ஒரு வாய்ப்பு. நாளை நன்கு ஆடினால் இன்னும் ஒரு தொடருக்கு கவலையில்லாமல் இருக்கலாம்.
கங்குலி உண்மையில் டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகளில் தான் நன்கு ஆடியுள்ளார். எனவே அவரை கண்டிப்பாக ஒரு நாள் போட்டிகளுக்கு எடுத்திருக்க வேண்டும்.
நாளைய ஆட்டம் கங்குலிக்கு ஒரு பயங்கர திருப்பு முனை அல்லது ஒரு முற்றுப்புள்ளி.

Saturday, January 28, 2006

மனதின் ஆற்றல்கள்.

ஒரு மனிதன் முதலில் கற்க வேண்டியது தனது மனதை ஒருமுகபடுத்துவது எப்படி என்பதை- இவ்வாறு கூறுபவர் சுவாமி விவேகானந்தர். மனது உண்மையில் ஒருமுக பட்டால் சாதரணமாக பல நாட்கள் எடுக்கும் வேலையை சில நாட்களில் செய்ய முடியும். தரம் உயரும். தன்னம்பிக்கை உயரும். இவ்வாறு பல பயன்கள் இருக்கும் போது மனதின் ஆற்றல்கள் பற்றி ஏன் பள்ளி கூடங்களில் எந்த பயிற்சியும் அளிக்க படுவது இல்லை. அதே போன்று பல தனியார் நிறுவனங்களிலும் மனதை ஒருமுகபடுத்துவது பற்றி விளக்க கூட்டங்கள் நடைபெறுவது குறைவாகவே உள்ளது.
மனதை ஒருமுகபடுத்துவது என்பது எளிதான காரியமாகவே உள்ளது அதை குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு. நீ என்ன வேலை செய்தாலும் உன் உடல், மனம், ஆத்மா அனைத்தையும் அர்ப்பணித்து விடு என்று கூறும் விவேகானந்தர் அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார்.
நிமிர்ந்து விரைப்பாக அமர்ந்து கொண்டு மூச்சை இழுத்து இழுத்து விடுங்கள். இழுக்கும் போதும் , விடும் போதும் ஓம் என்று மனதிற்குள்ளாக சொல்லுங்கள். இவ்வாறு தினமும் இரு வேளை அரை மணி நேரம் செய்யுங்கள்.

ஹர்பஜன் நீக்கபடுகிறார்.

இந்த முறை பிட்ச் ஸ்பின்னர்களுக்கு பயனளிக்காத பட்சத்தில் , ஹர்பஜன் நீக்கபட்டு கங்குலி ஆட கூடும் என தெரிகிறது. அகர்கர் , ஜாகிர் கான் இரண்டு பேருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அநேகமாக அகர்கர் இடம் பெற வாய்ப்புள்ளது. என்னை பொறுத்தவரையில் அகர்கர் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் ஆடுவது வியப்பிற்குரிய அமசங்களில் ஒன்று. ஜாகிர்கான் போன போட்டியில் சிறப்பாகவே பந்து வீசினார். நம்மிடையே உள்ள நல்ல வேக பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர்.மிக திறமைசாலி. அவரை மேலும் ஊக்குவிப்பவதை விட்டு விட்டு அகர்கர் போன்றவர்களை இன்னமும் அணியில் வைத்திருப்பது ஒரு புரியாத புதிர்.
இன்னமும் ஏன் எடுக்க படுகிறார் என்று தேர்வாளர்கள் ஏதேனும் காரணத்தை கூறினால் சொன்னாலும் சொல்வார்கள் எழுத வசதியாக இருக்கும்.

அரசு கேபிள் தொழிலை எடுத்து கொள்வது

அரசியல் காரணத்திற்காக செய்ய பட்டாலும் அரசு கேபிள் தொழிலை எடுத்து கொள்வது நல்லதையே செய்யும். தற்போது கேபிள் தொழிலில் ஒரு கட்டுபாடு, ஒழுங்கு என்பது சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. இவர்கள் வைப்பது தான் கட்டணம், இவர்கள் கட்டுவது தான் வரி என்று சுத்தமாக கன்ஸ்யூமர் நலன் மறைந்து போய் விட்டது.
அதே போன்று பே-சானல்கள் கூத்து போன்றவையும் மறையும். பே-சானல்கள் அரசிடம் விளையாடுமா என்பது சந்தேகமே. ஒரு நல்ல சானல் மற்றும் 10 டப்பா சானல் என்று அனைத்தையும் மிக்ஸ் செய்து ஒரு தொகுப்பாக சானல்கள் வழங்குவது நிற்கும். செட்- டாப் டப்பாக்கள் அடுத்த படியாக அறிமுக படுத்த படலாம். இதுவும் நல்லதே. மொத்தமாக 4 தமிழ் சானல்கள்,3 ஸ்போர்ட்ஸ் சானல்கள் மட்டும் எடுத்து கொள்ள இது வழி வகுக்கும்.
கேபிளுக்கு மாதம் 50 மட்டுமே கட்ட வேண்டி வந்தால் அது நன்மையே தரும்.

பணத்தை திருப்பி கேட்பது முறையா?

ஆதி படம் எதிர்பார்த்த அளவு ஒடவில்லை என்பதினால், விஜய் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் முற்றுகை இடுவதாக ஜூனியர் விகடன் தெரிவிக்கிறது.
முதலில் நான் நடிகர்களுக்கு வக்காலத்து வாங்குவதில்லை. என்னுடைய மற்ற பதிவுகளை பார்த்தாலே இது தெளிவாக தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் தவறு விநியோகஸ்தர்கள் மீது இருப்பதாகவே நான் கருதுகிறேன். முதலில் இந்த படத்தில் லாபம் வந்திருந்தால் இதை அவர்கள் விஜய்க்கு பங்கு கொடுத்திருப்பார்களா? நட்டம் வரும் போது மட்டும் விஜய் பணம் திருப்பி கொடுக்க வேண்டுமா? போட்டி போட்டு கொண்டு விலையை ஏற்றி விடுவது இவர்கள் தானே. எந்த படத்தையும் அது விநியோகஸ்தர்களுக்கு காட்ட பட்ட பின்னரே தான் விலை நிர்ணயம் செய்ய பட வேண்டும் என வழிமுறை கொண்டு வர வேண்டியது தானே..
சினிமாவை பொறுத்த வரையில் இலாபம் அதிக அளவில் தனக்கு வர வேண்டும் ஆனால் நஷ்டம் வந்தால் தான் மட்டும் அதில் தப்பி விட வேண்டும் என்கிற ரீதியில் இவர்கள் செயல் படுகிறார்கள். அண்டை மாநிலங்களான கேரளாவிலோ நடிகர்களின் சம்பளம் மிகவும் கம்மி. ஆந்திராவிலோ சம்பளம் எவ்வளவாக இருப்பினும் அட்வான்ஸாக வழங்க படுவது 1 லட்சம் மட்டுமே. இந்த மாதிரியான கட்டுபாடுகள் சினிமா தொழிலை மேன்படுத்தும்.
அதை விட்டு விட்டு , என்ன ஏது என்று தெரியாமல் படத்தை வாங்குவது, அப்புறம் போய் பணத்தை கேட்பது(கிடைக்காது என்பது வேறு விஷயம்) என்பதெல்லாம் இவர்கள் இன்னமும் தங்கள் தொழிலின் வெற்றி இரகசியத்தை கற்கவில்லை என்பதை காட்டுகிறது.

சிம்புவுக்கு அடி உதை

தறிகெட்டு தெரியும் சிம்புவுக்கு இது ஒரு பாடம். இவர் பாட்டுக்கு போய் பொது மக்களிடம் வம்பு செய்ய , இருட்டில் அடையாளம் தெரியாமல் அவரை அடித்துள்ளனர். ஆனால் பின்னர் அவர்களே அவரை ஆட்டோவில் அனுப்பியும் உள்ளனர்.
சிம்பு இனிமே செய்வாரா வம்பு?மக்களுக்கு இருக்கு தெம்பு...உனக்கு இல்லை கொம்பு..
இதில் அவருடைய அப்பா T.ராஜேந்தர் அங்கே வந்து சவுண்டு விட பார்த்திருக்கிறார். கூட்டத்தை பார்த்தவுடன் ஒடி விட்டார். (அப்ப சினிமாவில இவர் மக்களுக்கு கூவுனதெல்லாம் வெறும் வேஷம்).
இந்த செய்தி தமிழ்முரசு மற்றும் தட்ஸ்தமிழ் இணைய தளங்களில் வந்துள்ளது. கூடிய சீக்கிரம்,குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் தலைப்பு செய்திகாக வரும்.
கூடிய சீக்கிரமே இதை கிண்டலடித்து தனுஷ் படத்தில் ஒரு காட்சி வரும். அடக்கி வாசிக்கங்கப்பா. நீங்க அடிச்சா சினிமால தான் அடி வாங்கிகிட்டு ஒடுவாங்க. நடைமுறையில் யாரவது ஒருவன் கை வத்தால் போதும் , மாட்டினவனை ஊரே வந்து அடிக்கும்.

Thursday, January 26, 2006

சொன்னாலும் சொல்வார்கள்.

1. இரண்டு அணியின் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக பிட்ச் தயாரித்தோம். ஆனால் அது இரண்டு அணியின் பேட்ஸ்மன்களுக்கும் சாதகமாக மாறிவிட்டது.-பிட்ச் அமைப்பாளர்கள்.
2. காங்கிரசை சேர்ந்த வன்னியர்கள் பார்க்காவிட்டால், சன் TV திவாலாகிவிடும் என்பதை தி.மு.க. உணரவேண்டும். திண்டிவனம் ராமமூர்த்தி.
3. ஏன் இந்த முறை தேர்தல் வருகிறது. அம்மா ஆட்சி அப்படியே தொடர்ந்தால் என்ன என்று மக்கள் என்னை தினந்தோறும் கேட்கிறார்கள்- காளிமுத்து.
4. சட்ட சபையில் 234 இடங்களில் நாம் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் எனும் போது நமக்கு எதற்கு கூட்டணி என்று ம.தி.மு.க தொண்டர்கள் கேட்கிறார்கள்- நாஞ்சில் சம்பத்.
5. பாராளுமன்ற தேர்தலின் போது கொடுக்க பட்ட தொகுதிகளை விட கூடுதலாகவே கூட்டணி கட்சிகளுக்கு வழங்க படும்.-கருணாநிதி.

சுஜாதாவின் கதைகள்.

ஒரு சின்ன ட்விஸ்ட் அதனை பெரும்பாலும் ஊகிக்க முடிகிறது.ஆனாலும் சுவாரசியமான எழுத்து நடையினாலும் வர்ணனையினாலும் வாசகர்களை இழுக்கிறார் சுஜாதா. சமீபத்தில் அவருடைய பல்வேறு கதை தொகுப்புகள் படித்தேன். அதனில் ஒன்று வானத்தில் ஒரு தாரகை. 9 கதைகள் , 88 பக்கங்கள்.
சுஜாதாவின் கதைகள் இவ்வாறே பெரும்பாலும் அமைகின்றன. காரக்டர்கள் அறிமுகம் என்விரான்மென்டோடு சேர்த்து. கூடவே ஒரு சின்ன சமூக அவலம். ஒரு சின்ன திருப்புமுனை . ஊகிக்க முடிந்தாலும் சுவாரசியமாக. கூடவே கதை சொல்லும் நீதி மாதிரி வெளிப்படையாக தெரியாத ஒரு நீதி கருத்து. மத்திய தர வர்க்க பலவினங்கள், தனி மனித சபலங்கள் போன்றவை இவருடைய கதைகள் சித்தரித்தது போல யாரும் சித்தரிக்கவில்லை.
வெற்றி பட கதாநாயகர்கள் ரஜினி விஜய் அந்த் வட்டத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பது போல சுஜாதாவும் தன்னுடைய வெற்றி நடைக்கு பலியாகிவிட்டார் எனவே தோன்றுகிறது அவர் மீண்டும் மீண்டும் அதே பேட்டர்னில் கதைகள் எழுதுவதை பார்க்கும் போது.
அவருடைய சிறந்த தொகுப்பாக நான் கருதுவது ஸ்ரீரங்கத்து தேவதைகள். இதின் இரண்டாவது பாகம் ஆனந்த விகடனில் வந்தது. முதலில் இருந்த் வீரியத்தில் பாதி கூட இதில் இல்லை. சுஜாதாவிற்கு வயதாகி விட்டதா என்று நாம் கேட்டால், வயதானது உங்களுக்கு என்று பதில் கூறுகிறார் சுஜாதா...

ஆஸ்திரெலியா அணியின் வெற்றி.

முக்கியமான ஆட்டகாரர்களுக்கு ஒய்வு கொடுப்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறது ஆஸ்திரேலியா அணி. ஆனாலும் அவர்கள் அணியின் ஆட்டதிறன் ஒரளவு பாதிக்க பட்டாலும், நாளடவில் அது பலன்களை கொடுக்கிறது என்று ஆஸ்திரேலியா அணியின் தேர்வாளர்கள் நம்புகிறார்கள்.
வெற்றி பெர வழிகளில் ஒன்று புதியதாக ஒன்றை தேடாமல், இருக்கின்ற ஐடியாவை காப்பி அடிப்பது. ஏன் எல்லா அணிகளும் இந்த நடைமுறையை பயன்படுத்த கூடாது. நல்ல ஆட்டகாரர்களுக்கு அங்கங்கே ஓய்வு கொடுப்பது அவர்களின் ஆட்டதிறனை , உடல் வலிமையை மேன்படுத்தானே செய்கிறது.
பதான், சேவாக் போன்றவர்களுக்கு அங்கங்கே ஓய்வு கொடுப்பது நல்லதாகவே முடியும் என நான் கருதுகிறேன்.

பாசக்கிளிகள்.

இன்னமும் பராசக்தி வெற்றி மயக்கத்தில் இருக்கின்ற கலைஞரின் வசனத்தில் இன்னும் ஒர் திரைப்படம். இதனை புகழ்ந்து விமர்சனம் வந்த்துள்ளது. கலைஞரின் குடும்பத்தாரால் நடத்த படுகிற தமிழ்முரசு பத்திரிக்கையில். விமர்சனம் என்பது அடுத்தவர்கள் பார்வை. தானே தன்னுடைய படைப்பை புகழ்வது கலைஞரின் ,அதிலும் சந்தோஷபட்டு கொள்வது கலைஞர் மற்றும் ஜெயலலிதா இரண்டு பேரிடமும் உள்ள மட்டமான குணம் . இப்போது தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளிலும் தொடர்கிறது.
தோழர் நல்லகண்ணு அவர்களே என்று கட்சியின் மூத்த தலைவரையும் சாதாரண உறுப்பினர் பெயர் சொல்லி கூப்பிடுவது கம்யூனிஸ்ட் கட்சியில் மற்றுமே சாத்தியம். தனி மனிதனை முன்னிறுத்துகிற எந்த ஒரு இயக்கமும் நல்ல பலன்களை தராது. ஒரு சமுதாயதத்திற்கு நன்மை விளைய வேண்டுமானால் ஒரு நபர் புகழ் பாடுகிற இயக்கம் தீர்வு அல்ல. இன்றைய நிலைமையில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க போன்ற இயக்கங்கள் உண்மையில் தத்தம் தலைவருக்கு இரசிகர் மன்றங்கள். இந்த இயக்கங்கள் விஜய், அஜீத் ரசிகர் மன்றங்கள் போலவே செயல் படுகின்றன.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளாத வரையில் இந்த கூத்துக்கள் தொடரும்.

பூட்டா சிங்கின் ராஜினாமா.

காங்கிரசு வழக்கம் போல அவசரமாக ஒரு அரசை கலைக்க அது எல்லா விதத்திலும் அவர்களுக்கு தர்மசங்கடமாக முடிந்துள்ளது. தற்போது தீர்ப்பு வந்த நிலையில் பூட்டா சிங் ராஜினாமா செய்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது.
காங்கிரசு தேவையில்லாமல் அரசுகளை கலைப்பதை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கும் என்றே நான் கருதுகிறேன். பீகாரில் காங்கிரசு செய்த தவறு இன்று நன்மையாகவே முடிந்துள்ளது.


1. லாலு காலியானார்.
2. பூட்டாசிங்கும் காலியானார்.
3. கலாம் அடுத்த முறை இந்த தவறினை செய்ய யோசிப்பார்.
4. காங்கிரசு ஆட்சியை கலைக்க தயங்கும்.


தி.மு.க அணியின் தொகுதி பங்கீடு.

ஜூனியர் விகடனில் வெளி வந்த பட்டியல் வெறும் ஊகமாக கூட இருக்கலாம். ஆனால் தி.மு.க குறைந்த பட்சம் 138 தொகுதிகளில் போட்டியிட முயலும் என்பது நம்பகமாகவே உள்ளது. தி.மு.க அணி தேர்தலை நோக்கி செல்ல செல்ல குழப்பம் அதிகரித்து கொண்டே செய்கிறது. தொகுதி பங்கீடு, தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்த தொகுதியில் போட்டியிடுவது போன்ற பிரச்சனைகள் நிறைய.எல்ல கட்சிகளிலும் அதிருப்தியாளர்கள் வரலாம். கட்சி அதிருப்தியாகி வெளியேறலாம். இது போன்ற பிரச்சனைகள் சென்ற முறை எழவில்லை. ஜெயலலிதா கூட்டணியை பொறுத்தவரையில் தெளிவாகவே இருக்கிறார். அ.தி.மு.க வுகு மட்டுமே தொகுதிகளை பொறுத்தவரையில் முன்னிரிமை. சென்ற முறை அவர் கூட்டணி தலைவர்கள் யாரையும் கேட்காமல் முதலாக அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியிட்டார். பாண்டிசேரியை பா.ம.க விற்கு கொடுத்தார்.(பின்னர் காங்கிரசு அங்கு மட்டும் தனித்து போட்டியிட்டது)
இந்த முறை கலைஞர் அந்த அளவுக்கு கடுமையாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. எண்ணிக்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் ம.தி.மு.க வெளியேறும். கலைஞர் இதை சமாளிப்பதில் தான் இந்த தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் அம்சமாக அமையும்.

தமிழ்மணத்தின் அறிவிப்பு -டோண்டுவின் நன்றி.

தமிழ்மணத்தின் அறிவிப்பு ஆச்சரியத்தை தரவில்லை. தொந்தரவுகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க நினைக்கிறார்கள். இது போலிகளை சற்றே வலிவிழக்க செய்யும். ஆனால் ஒன்று நாம் நினைவில் வைக்க வேண்டும். பின்னூட்டங்கள் வெளியாவது சற்றே தாமதமாகலாம். இது விறுவிறுப்பை குறைக்கும். இது ஒரு அசௌரியமாக முடியும்.

என்ன செய்தாலும் போலிகள் மாற்று வழிகள் , பாதைகள் கண்டுபிடித்து கொண்டே தான் இருப்பார்கள்.ஆனால் பின்னூட்டத்தை சரிபார்த்த பின்னர் மட்டுமே வெளியிடுவது இதற்கு ஒரு பின்னூட்ட அளவில் கட்டு படுத்தலை வெற்றிகரமாக கொண்டு வரும்.

டோண்டு இதற்கு பாராட்டு தெரிவித்தது எதிர்பார்த்தது. அவர் இதனால் மிக கடுமையாகவே தொந்தரவு செய்யபட்டவர். எனக்கும் அவர் இந்த கட்டுபாடுகளை செய்ய சொல்லி பல முறை அறிவுரை சொல்லி உள்ளார்.

இனிமேல் போலிகள் தங்கள் முகமூடிகளை கலைந்து விட்டு, ஆபாசமான வார்த்தைகளை விட்டு விட்டு மற்றவர்கள் போல தனி பதிவுகள்,பின்னோட்டங்கள் இட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.எனவே இந்த அறிவிப்பு பதிவர்களுக்கு அசௌரியமாக இருப்பினும் போலிகளின் சுதந்திரத்திற்கு வேலி அமைத்துள்ளது.

Wednesday, January 25, 2006

5 நாட்கள் போட்டியிலும் மாற்றங்கள் தேவை.

ஒரு நாள் போட்டிகளில் புதுமைகள் பயன்படுத்த படும்போது 5 நாட்கள் போட்டியிலும் மாற்றங்கள் கொண்டு வரலாம். இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன்னர், ஒரு ஆட்டகாரரை மாற்றும் அதிகாரம் அளிக்க பட்டால், 5 நாள் போட்டியில் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கும். முதல் இன்னிங்சில் ரன்களை குவித்து விட்டு இரண்டாவது இன்னிங்க்சில் கூடுதால ஒரு பந்து வீச்சாளரை வைத்து அதிக விக்கெட்கள் எடுக்க அணிகள் முயற்சிக்கும். பந்து வீச்சு முற்றிலும் எடுபடாத போது தற்போதைய இரண்டு மாட்சுகள் மாதிரி உப்பு சப்பில்லாமல் ஆட்டங்கள் அமைவதை இந்த மாதிரியான புதுமைகள் தடுத்து நிறுத்தும்.

அல்லது கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ஒர் இன்னிங்க்சிற்கு இத்தனை ஒவர் என்பது நிர்ணயிக்க படலாம். (125 ஒவர்கள் ஒரு அணிக்கு முதல் இன்னிங்சில் ,100 ஒவர்கள் இரண்டாவது இன்னிங்சில்).
இதனால் சில சாதனைகள் குறையலாம். தனி வீரர்கள் 300,350 என்று ரன்கள் குமிப்பது மறையலாம். ஆனால் டிராவில் போட்டி முடியாது என்கின்ற பட்சத்தில் அணிகள் 5 நாள்கள் போட்டி ஆடுகின்ற விதமே மாறி விடும்.அல்லது தொடர்ச்சியாக மூன்று ஒரு நாள் போட்டி நடைபெற்றது மாதிரியாக 5 நாள் போட்டி மாறி விடலாம். ஆனால் என்ன?. இந்த மாதிரி வெற்றி தோல்வி இன்றி ஆடுவதற்கு பதிலாக இந்த மாற்றங்கள் ஆட்டத்தை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் ஆக்கும்.

Monday, January 23, 2006

தோனி மீண்டும் ஒரு முறை அதிரடி ஆட்டம்.

அதிரடி ஆட்டம் அதுவும் 5-நாள் போட்டியில் ஆடுவது என்பது இந்திய அணிக்கு புதியதே. ஆனால் சேவாக் மற்றும் தோனி அந்த பலத்தை இந்திய அணிக்கு கொண்டு வந்துள்ளனர். பதான் கூட நல்ல முறையில் ரன்கள் குவிக்கிறார்.பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் தான் இரண்டு அணிகளும் ரன்கள் இரண்டு போட்டியிலும் ரன்கள் குவித்துள்ளன.
இதே நேரத்தில் ஹைடன் 381 ரன்கள் அடித்த போது காவஸ்கர் அடித்த கமெண்ட் ஞாபகத்திற்கு வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிராக 381 ரன்கள் அடிப்பது எளிதான காரியம் என்றால் அதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை?. அதே நேரம் 381 ரன்கள் மற்ற அணிக்கு எதிராக எடுப்பது கூட சிரமமான காரியமாக இருக்கலாம்.


எந்த மைதானத்திலும் அதிரடி ஆட்டம் ஆடுவது தனி திறமையே. அதில் அஃபிரிடி, சேவாக், தோனி போன்றவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.ஆனால் இந்த போட்டியும் டிராவை நோக்கி போகின்றது. மிக பரபரப்பாக எதிர்பார்க்க பட்ட தொடர்... இந்த ரேஞ்சில் போய் கொண்டிருக்கிறது.

போடுங்கம்மா ஒட்டு..

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு நடத்தும் தேர்தல் கணிப்பில் வந்து கலந்து கொள்ளுங்கள். மற்றவர்களையும் கலந்து கொள்ள சொல்லுங்கள்.

அளவும் எண்ணிக்கையும்...

எனக்கு இடபடுகிற பின்னோட்டங்கள் இரண்டு கருத்துக்களை தெரிவிக்கின்றன.
ஒன்று பதிவுகளின் அளவு. இதை பற்றி கடற்புரத்தான் ஜோ குறிப்பிட்டார்.(ஒரு சில பதிவுகளை தவிர, மற்ற பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றே நான் கருதுகிறேன்.) ஒரு தலைப்பில் நான் சொல்ல விரும்பிய கருத்தை சொல்லி விட்டால் பதிவு முழு பெற்று விடுகிறது என்பது என்னுடைய நடை.

அடுத்த படியாக எண்ணிக்கை. அதிகமான பதிவுகளை எழுதியிருக்கிறேன் , மற்றவர்கள் பின்னூட்டங்கள் இடும் அளவிற்கு என்பது. எண்ணிக்கை என்பது நபருக்கு நபர் மாறுபடத்தான் செய்யும்.

இந்த மாதிரியான கருத்துக்களை நேர் கொள்வது எனக்கு எளிதாகவே உள்ளது. பதிவுகள் எனக்கு திருப்திகரமாக உள்ளதா என்பது ஒரு கேள்வி. மற்றொன்று நமது பதிவுகளை படிப்பவர்களிடம் என்ன அதிர்வுகளை அல்லது தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

என்ன நோக்கத்தோடு ஓவ்வொரு பதிவையும் நாம் எழுதுகிறோம் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்கிறார்களா, ஏற்று கொள்கிறார்களா,மறுப்பவர்கள் கூறும் காரணம் என்ன,அது நமக்கு சரியென படுகிறதா என்பவை மிக ஆழமாக கவனிக்க பட வேண்டியவை.

நான் மிகவும் உணர்வு பூர்வமாக எழுதிய "சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்" மிக குறைந்த பின்னோட்டங்களையே பெற்றது. நான் விளையாட்டுக்காக எழுதிய "சொன்னாலும் சொல்வார்கள்","கேட்க கூடாத கேள்விகள்" போன்றவை அதிக பின்னூட்டங்கள் மற்றும் மெயில் பாராட்டுக்களை பெற்று தந்தன.

ஒவ்வொரு பதிவும் ஒரு சின்ன தூண்டலினாலேயே எழுத பட்டது. அதை படிப்பவர்களுக்கும் ஒரு தூண்டலை உண்டாக்கினால் பின்னூட்டங்கள் கிடைக்கலாம். நான் நிறைய பதிவுகளை படித்தாலும் பின்னூட்டம் கொடுப்பது என்பது மிக குறைவு. அதனால் படித்தது இரசிக்க படவில்லை என்றோ, பாதிக்கவில்லையென்றொ அர்த்தமாகாது. சில பின்னூட்டங்கள் ஜாதி சண்டையினால் வருபவை. இணையத்தில் பதிவர்களிடையே ஜாதி சண்டை (மிக சிறிய அளவில் இருந்தாலும் )எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது.

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உண்மையில் பொழுது போக்காக துவங்க பட்டது. அது இப்போதும் அவ்வாறே தொடர்கிறது. விமர்சித்த ஜோ,அப்பாவி ஆறுமுகம்,ஜிகிடி, மகேஸ்,செல்வன், கிறுக்கன் அனைவருக்கும் நன்றி.

சாணி அடிப்பவர்கள் இங்கே அடிக்கவும்

பாலச்சந்தர் கணேசன்னு ஒருத்தர் ஒரு பத்திரிக்க நடத்துராரு...ச்சும்மா பின்னூட்டம் போடற கணக்கா அவரு பதிவு போடறதை பாத்தா பயமா இருந்தது.. லோக்கல் தாதா போலி டோண்டு வந்து போட்டான் பாரு ரெண்டு போடு..இப்ப குறைஞ்சிருச்சி.....


http://appaviarumugam.blogspot.com/2006/01/blog-post_23.html

அதற்கு கீழ் ஜிகிடியின் பின்னோட்டம்.பெஞ்சில ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிற பேர்வழிக திடீர்னு எழுத்தார்வம் வந்து எழுத ஆரம்பிச்ச இந்த நெலம தான்.எழுதக் கிழிக்கிறேன்கிற பேர்ல கண்டதையும் வாந்தி எடுத்த வேண்டியது;இந்த லட்சணத்தில வெப்வடிவில வேற இதே கருமத்தை நடத்தி வந்தாங்களாம்.என்ன சொல்லி..என்னத்தப் பண்ணி...



உங்களுக்கு ஒரு விளக்கம்.
1. போலி டோண்டு வருகை அதிர்ச்சியே தவிர, எனது பதிவுகளை பாதிக்கவில்லை.
2. ஜிகிடி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி நான் என்ன சொல்ல?.சுறுசுறுப்பானவர்கள் வேலை பளுவுக்கு நடுவேயும் எழுத முடியும் என்பதை அவர் என்னை நேரில் பார்த்தால் ஒப்புக் கொள்வார். இந்த கருமத்தை-- பாராட்டுக்கு நன்றி ஜிகிடி அவர்களே. ஆனாலும் விமர்சனத்திற்கு நன்றி.
3. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு - புதிய வடிவத்தில் பதிப்பிக்க பட்டுள்ளது. ஜிகிடி இந்த பின்னோட்டத்தை அங்கே வந்து இட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Sunday, January 22, 2006

மீடியாவுக்கு ஏன் செல்ல பிள்ளைகள் இருக்க்கிறார்கள்

தற்போது ஒரளவு சிறப்பாக ஆடுகிற அணிகள் :ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா. இந்த அணியின் கேப்டனகளை ஒப்பிட்டு பார்க்கும் போது மற்றவர்கள் அளவுக்கும் பாகிஸ்தான் அணி தலைவர் ஆன இன்சமாம்-உல்-ஹக் பாரட்ட படவில்லை. உலக அணி தேர்ந்தெடுக்க பட்ட போது கூட இன்சமாம் அந்த அணியில் இடம் பெறவில்லை. பின்னர் சச்சினுக்கு பதிலாக அவர் தேர்ந்தெடுக்க பட்டார்.

கேப்டனாக ஆன பின்பு இன்சமாம் மிக சிறப்பாக ஆடுகிறார். எந்த காரணத்திலோ, மீடியா சில ஆட்டக் காரர்களை ஒதுக்கியே வைத்திருக்கிறது. முன்பாவது இன்சமாம் அடிக்கடி ரன் அவுட் ஆகி காமெடி செய்வார். இப்போது அதையும் குறைத்து விட்டார். தனது அணி ஒரு முறை உலக கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். இன்னோரு முறையும் பாகிஸ்தான் உலக கோப்பை இறுதி சுற்றில் ஆடியதற்கும் பக்கபலமாக இருந்தார்.

சில விஷயங்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகின்றது. அவற்றில் ஒன்று மீடியாவுக்கு ஏன் செல்ல பிள்ளைகள் இருக்க்கிறார்கள்?

தேர்தல் கருத்து கணிப்பு.

தேர்தல் கருத்து கணிப்பு ஒன்றை ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு நடத்துகிறது. வந்து வாக்களிப்பீர். உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள், கூட வேலை செய்வோர் மற்றும் உற்றார் , உறவினர் அனைவருக்கும் இந்த கணிப்பில் கலந்து கொள்ள் வேண்டுகோள் விடுங்கள்.

Saturday, January 21, 2006

கேட்க கூடாத கேள்விகள்.

1. இந்தியா 5 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாமா? - கங்குலியிடம்.
2. பா.ம.க விலுருந்து அடுத்து எந்த சட்டமன்ற உறுப்பினர் விலகுவார்?- ராமதாசு.
3. ஐஸ்வர்யா ராயோடு எப்ப நடிப்பீர்கள் ? - ரஜினி
4. கல்யாண மண்டபத்துக்கு நடுவே பாலம் கட்டலாமா?-விஜயகாந்த்.
5. பாசகிளிகள் படம் எப்படி ஓடுது?- கலைஞர்
6. சானியா கால்ஷீட் கிடைச்சிருச்சா? -சிலம்பரசன்.
7. கூட்டணி மாற காரணம் கிடைச்சிருச்சா?.-வைகோ
8. கௌதமிக்கும் அப்புறம் யாரு?- கமல்.
9. நாக்ரவி அடுத்து என்ன பண்ணுவார்-சினேகா
10. உங்க சொந்த பெயரில் எப்ப பின்னோட்டம் இடுவீங்க- போலி டோண்டு.

சொன்னாலும் சொல்வார்கள்.

1. கங்குலியை நீக்குவது மிக கடினமாக இருந்தது. ஆனால் அவருடன் ஆடுவது அதை காட்டிலும் கடினமாக இருக்கிறது.- டிராவிட்
2. கங்குலியை அணியில் இருந்து ஒரேடியாக நீக்குவதை விட, இவ்வாறு நடத்துவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.-சாப்பல்
3. கலைஞர் நம்ப வைத்து துரோகம் செய்பவர். கடைசியில் காலை வாரி விடுபவர். எனவே தான் நாங்கள் அவருடன் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.- நாஞ்சில் சம்பத்.
4. தி.மு.க வுக்கும் சன் டிவிக்கு எந்த தொடர்பும் இல்லை. அதனால் தான் அதற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் நானும் மாறனும் சென்று கவர்னரை சந்திப்போம்- கருணாநிதி.
5. அரசு ஊழியர்கள் நலம் விரும்பும் அரசு இது. அதனால் தான் 90 சதவிகிதம் வருமானம் ஊழியர்களுக்கே போகின்றது என்று குற்றம் சாட்டிய நாஙகள் இன்று அதை இன்னும் கூட்டியிருக்கிறோம்.- ஜெயலலிதா.
6. நான் ஆட்சிக்கு வந்தால் மக்கள் வீடு தேடி இட்லி,தோசை எல்லாம் வரும் -விஜயகாந்த்.
7. எல்லா தொகுதியிலும் நான்கு வேட்பாளர்களை நிறுத்தும் பலம் பா.ஜ.க வுக்கு உள்ளது- பொன்.இராத கிருஷ்ணன்.
8. என்னுடைய அடுத்த படத்தில் ஐஷ்வர்யா ராய் கிடைக்காவிட்டால் அவருடைய அம்மா கதாநாயகி- ரஜினி.
9. என்னுடைய அடுத்த படத்தின் பெயர் - மன்னாதி மன்னன். இதில் நான் என் பையன் இரண்டு பேரும் நடிக்கிறோம். இரண்டு பேருக்கும் ஜோடி நமீதா.

10. தமிழ் சினிமா புத்திசாலிகளே இல்லை. எல்லாரும் கோமாளிகள். இவர்களை பார்த்து தினமும் விழுந்து விழுந்து சிரிப்பதே எங்கள் வேலை- கேரள சினிமா நடிகைகள்.

புதிய வடிவத்தில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.

கொஞ்ச நேரம் போராடிய பின்பு புதிய வடிவத்தை கொண்டு புதிய பதிவுகளை சரியாக பதிவு செய்ய முடிந்தது. வருடத்திற்கு இரண்டு முறையாவது வடிவத்தை மாற்றி விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

மாற்றங்கள் மனதிற்கு உற்சாகத்தை தருகின்றன. அதனால் பிரச்சனைகள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக இலாபமே அடைகிறோம். சிறு குழந்தை பருவத்திலிருந்தே மாற்றங்களை நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு முறையும் பள்ளி மாறும் போதும், புதிய ஊர் செல்லும் போதும் சிரமங்கள் இருந்த போதிலும், இறுதியில் அவை வலிமை ஊட்டுகின்றன.

எந்த ஒரு மாற்றத்தையும் தவிர்ப்பதை விட , தானாக முன்வந்து ஏற்று கொள்வது பெரும்பாலும் பயன் தருவதாகவே உள்ளது. மாற்றங்கள் பற்றிய மனிதன் பயங்கள் வெறும் பிரமைகள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது நீங்கள் பயந்த நிறைய விஷயங்கள் நடந்தே இருக்காது.

மாற்றங்களை நீங்கள் உருவாக்க ஆரம்பித்தால், அது உங்களை மற்றவர்களை விட பல அடி தூரம் முன்னே நகர்த்தும். எனவே ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுவில் நீங்கள் பல மாறுதல்களை காண்பீர்கள்.

கவிழ்கிறது காங்கிரசு ஆட்சி.

பொதுவாகவே காங்கிரசு மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது, மாநில அரசுகளை கலைப்பது, மற்ற கட்சிகளை உடைப்பது, எதிர்கட்சி முதல்வர்களை படுத்தி எடுப்பது போன்ற காரியங்களை மீண்டும் மீண்டும் செய்து வந்துள்ளது. அது இப்போதும் தொடர்கிறது. பீகார், ஜார்கண்ட், கோவா போன்ற இடங்களில் முயற்சித்தார்கள். அது பூமராங்காக மாறி அவர்க்ளையே மீண்டும் தாக்கியது.

இப்போது தேவகவுடா கட்சியை உடைத்து தனி பெரும்பான்மை பெற முயன்றார்கள். எச்சரிக்கையான தேவகவுடா இப்போது மகனுடன் சேர்ந்து ஒரு நாடகம் ஆடுகிறார். காங்கிரசு அரசாங்கம் கர்நாடாகாவில் கவிழ்ந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே தென் இந்தியாவில் அரசுகள் இவ்வாறு கவிழ்வது என்பது அரிதாகவே நடந்துள்ளது. பொதுவாகவே தென் இந்தியாவில் தேர்தல் முடிவுகள் தெளிவான ஆதரவாக அமையும். இந்த முறை அது நடக்கவில்லை. விளைவு தான் இந்த குழப்பங்கள். தரம்சிங் ஆட்சி மிக மட்டமாகவே இருந்தது என்பதால் , இந்த ஆட்சி கவிழ்வது பற்றி பொது மக்களிடம் ஒரு அதிருப்தியும் இருக்காது. கொஞ்சம் முயற்சி செய்தால் கூட குமாரசாமி இந்த அரசாங்கத்தை விட நல்ல பெயர் எடுத்து விடலாம்.

இதில் மிக பெரிய வேடிக்கை, காங்கிரஸ் தலைவர்கள் தேவகவுடாவை குடும்ப அரசியல் நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுவது. அது சரி எதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தானே ஜனநாயகம்.

Friday, January 20, 2006

லயோலா கல்லூரி கருத்து கணிப்பு.


ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், பொதுவாகவே ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள் என்றும், விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி அமைந்தால் அது தி.மு.க வை பெரிதும் பாதிக்கும் என்றும் லயோலா கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.




இவர்கள் சென்ற தேர்தலின் போது தெரிவித்த கணிப்புகள் தவறாகவே அமைந்தன. போன சட்டமன்ற தேர்தலில் இவர்கள் மட்டுமல்ல , அனைத்து பிரபல பத்திரிக்கைகளும் தவறாகவே கணித்திருந்தன.



முதலில் கருத்து கணிப்பு மூலம் விஜயகாந்த் கட்சியின் செல்வாக்கினை கண்டறிவது மிக கடினமானது. பாரம்பரியமாக கட்சி அடிப்படையிலும், ஜாதி அடிப்படையிலும் வாக்களித்து வருகின்ற மக்களிடம் புதியதாக ஒரு கட்சி எடுபடும் என்பது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்று என்பது என் கருத்து.



தி.மு.க கூட்டணி போன முறை எடுபட்டதற்கான காரணங்களில் ஒன்று தொகுதி பங்குபாடு எளிதாகவே முடிந்தது. இந்த முறை அதிலே நிறைய சிக்கல் வரும். பா.ம.க, காங்கிரசு போன்றவை நிறைய எதிர்பார்த்தாலும் கலைஞர் அதை சமாளித்து விடுவார்.


ஆனால் ம.தி.மு.க மிகவே முரண்டு பிடிக்கும் என்றே தோன்றுகிறது.இத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியாத நிலையிலேயே, ம.தி.மு.க பேச்சாளர்கள் மிக கடுமையாக கலைஞரை தாக்குகிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியேற இவர்கள் காரணங்கள் உருவாக்கிறார்கள் என தோன்றுகிறது.
ம.தி.மு.க வெளியேறினால் அது தி.மு.கவுக்கு உண்டாக்குகிற பிரச்சினைகளை விட அனுகூலமாகவே இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில் போனமுறை போல அல்லாமல் இந்த முறை பா.ம.க, காங்கிரசு, கம்யூனிஸ்ட் தி.மு.க அணியில் உள்ளன.


எனவே தி.மு.க , வைகோவை விட்டு விட்டால் சுமை குறையும், பலம் கூடும் என்றே தோன்றுகிறது.

Thursday, January 19, 2006

மீண்டும் அகதிகள் வரவு.

இலங்கை நிலைமை மீண்டும் மோசமான நிலைமைக்கு போய் கொண்டிருக்கிறது. இதை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ஏனெனில் ஏற்கனவே அங்கு வருடக் கணக்கில் மோசமாகவே உள்ளது. இன கலவரம் ஒரு நாட்டை அழித்து நிர்முலமாக்கும் என்பதற்கு இலங்கை ஒரு நல்ல எடுத்துகாட்டு.

1984 -இல் இலங்கை தமிழர்களுக்கு இருந்த ஆதரவு மிக வலிமையானது. தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர்களுக்காக போரட்டமும் நிதி உதவி திரட்டுவதும் நடை பெற்றன.ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. அகதிகள் உயிர் மீது உள்ள பயத்தினால் இங்கே ஒடி வந்துள்ளனர். ராஜீவ் படுகொலைக்கு பின்னர் இங்கே ஆர்வம் குறைந்த நிலையில் இவர்களுக்கு என்ன உதவி கிடைக்கும் என்று தெரியவில்லை.

இரு இனங்களுக்கு இடையே வருகின்ற வெறுப்பு காலம் காலமாக இரு தரப்பு மக்களாலும் வளர்க்க பட்டு வருகிறது. இலங்கையில் இனிமேல் அமைதி என்பது வெறும் கனவாக இருந்து விடுமா?

மறுமுறை ஒரு முறை காண்போமா? என்று கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஒரு பாடலின் வரி நெஞ்சத்தில் தாங்க முடியாத ஒரு வலியை உண்டு பண்ணுகிறது. தாங்க முடியாத துயரம் என்பது பிரிவானால் வரும் வலி என்று ஒரு கவிஞன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

இங்கே நான் பார்க்கும் இலங்கை தமிழர்களிடம் அந்த வேதனை கண்களில் தெரிகிறது.

தமிழ்மண அனுபவங்கள்.

நான் ப்லாகை துவங்கி வெகு நாட்கள் ஆகிய போதும் , தமிழில் எழுத ஆரம்பித்தது சில காலத்திற்கு முன்பு மட்டுமே.

1.என்னுடைய பதிவுகளை பற்றிய மற்றவர்கள் கருத்து சொல்வது , பின்னோட்டம் இடுவது கலந்துரையாடலுக்கு இணையாக உள்ளது.

2. பதிவுகளின் அளவு பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ஜோ கடுமையாக எதிர்த்தாலும் அதை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். பதிவு பல பக்கங்கள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் ஜோ சொல்லி காட்டியது இது இல்லை. அதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். ஜோ சுருக்கமாக இருந்தாலும் சரக்கு இருக்க வேண்டும் என்று கூறுவது நியாயமே. பதிவுகள் பல வடிவங்களில் இருக்கலாம் என்பது அவர் உணர வேண்டும்.

3. எதிர்பாராதது போலி டோண்டுவின் அறிமுகம். அவர் எனது ப்லாகில் பின்னோட்டம் இட்டது எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது.

4. கசப்பானது இணையத்தில் நடக்கும் ஜாதி சண்டை. ஜாதியை சமுகம் நீர் ஊற்றி வளர்க்கிறது. அதனால் தான் அதன் முள்கள் இணையம் வரை தொடர்கின்றன.

5. மிக பெரிய மகிழ்ச்சி : பல்வேறு திசைகளிலும் பதிவாளர்கள் தமிழை எடுத்து செல்வது. சினிமா, பத்திரிக்கை, மீடியா என்று அனைவரும் தமிழை சீரழிக்கும் போது, பதிவாளர்கள் தமிழ் காக்க வந்த் இரட்சகர்களகாவே தெரிகிறார்கள்.

Wednesday, January 18, 2006

போலி டோண்டு அவர்களுக்கு ஒரு கடிதம்.

உங்கள் சொந்த பெயரில் எழுதி வரும் பதிவுகள் அந்த அளவு நன்றாக இல்லாவிட்டாலும், பின்னோட்டம் இடுவதற்கு யோசிப்பதற்கு பதிலாக ஒழுங்கான பதிவுகள் எழுதினால் உங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும்.
மிக முக்கியமாக நீங்கள் யாரென்ற உண்மையை நான் வெளியிடும் போது தமிழ்மணம் அதிர்ச்சி அடையும்.

Tuesday, January 17, 2006

டோண்டு ராகவன் மற்றும் என்னார் அவர்களுக்கு ஒரு கடிதம்.

முதலில் நான் எழுதிய பதிவு.

http://bunksparty.blogspot.com/2006/01/blog-post_113665559232878088.html

அதற்கு டோன்டு என்னார் அவர்களுடைய பதில்கள்.

http://www.blogger.com/comment.g?blogID=9191030&postID=113665559232878088


தனிப்பட்ட முறையில் நான் டோன்டு அவர்கள் மீது மிக்க மரியாதை வைத்துள்ளேன். சிறந்த வலைபதிவர்கள் என்றைய என்னுடைய பதிவில் அவருடைய பேரும் உண்டு.

இப்போது குலகல்வி திட்டம் பற்றி என்னுடைய பதில்.
உண்மையில் பிள்ளைகள் அதுவும் ஏழை பிள்ளைகள்,பல ஜாதியிலிருந்தும் உள்ள ஏழை பிள்ளைகள் பள்ளி கூடம் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?. அதற்கு எத்தனையோ வழிகள் உண்டு.

அதனில் ஒன்று தான் குழந்தைகளுக்கு சாப்பாடு போடுவது. இதைதான் காமராஜர் செய்தார்.(மதிய உணவு திட்டம்). பின்னர் எம்.ஜி.ஆர் விரிவாக்கினார்(சத்துணவு திட்டம்). இந்த திட்டங்கள் பெரிய வெற்றி பெற்றன என்பதும் நிறைய பிள்ளைகள் பயன்பெற்றனர் என்பதும் வரலாறு.


இது போன்று ஒன்றும் செய்யாமல் எதற்கு ஜாதி அடிப்படையில் தொழில் கல்வி கொண்டு வர வேண்டும்? இதில் என்னார் வேறு சொல்கிறார். டாக்டர் பையன் டாக்டராகிறார், வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது என்று எடுத்துகாட்டு வேறு. என்ன ஒரு முட்டாள் தனமான கருத்து. டாக்டர் பையன் டாக்டராக இருப்பது வெற்றியே... வக்கீல் பையன் வக்கீலாக இருப்பது வெற்றியே.
ஆனால் செருப்பு தைப்பவர் பையன் செருப்பு தைப்பனாகவே இருப்பது வெற்றியா?.


மேலும் டாக்டர் பையன் டாக்டராக வருவது குல தொழிலாக அல்ல. ஏனெனில் எல்லா ஜாதியிலும் டாக்டர்கள் இருக்கிறார்கள். அதை குடும்பத் தொழில் என்று கூறுங்கள்.

ஆக்க பூர்வமான எடுத்த காமராஜரையோ, எம்.ஜி.ஆரையோ யாரும் குறை கூறி எழுதுவதில்லை என்றும் இராஜாஜி இதை செய்திருந்தால் அவரையும் சமுகம் பாராட்டியிருக்கும் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.


வெள்ளை அறிக்கை.

எல்லா சட்டமன்றத்திலும் , மற்றும் நாடாளுமன்றத்திலும் அவ்வப்போது வரும் கோரிக்கை..வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்பது...
எனக்கு தெரிந்த வரை யாரும் வெள்ளை அறிக்கை விடவில்லை. இப்போது சில சந்தேகங்கள்.
1. வெள்ளை அறிக்கை - உள்ளதை உள்ளபடி சொல்வது... அப்படி என்றால் மீதி அறிக்கை இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறதே?
2. எதிர்கட்சியாக இருக்கும் போது கேட்பவர்கள், அதை ஆளுங்கட்சியாக இருக்கும் போது விட வேண்டியது தானே!!!

கவுன் பனேகா குரோர்பதி...

இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் இப்போது மிக பிரபலமாகிவிட்டன. இந்த நிகழ்ச்சிகள் விளம்பரதாரர்கள், பாரிவையாளர்கள்(இவை பைட் சானல்கள்) மற்றுமின்றி போட்டியில் பங்கு பெறுகின்றவர்களிடம் இருந்தும் வசூல் செய்கின்றன. எவ்வாறு?.
போட்டியாளர்கள் எஸ்.ம்.எஸ் அனுப்ப ஒரு முறை 6.50 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது.இதை பற்றி ஜூனியர் விகடன் முழு விப்ரம் வெளியிட்டுள்ளது.
யாராவார் கோடிஸ்வரன். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள்.

மோதல் முற்றுகிறது....

சபாநாயகர் திட்டவட்ட அறிவிப்பு: எந்த அதிகாரத்திற்கு முன்பும் நான் சரணடைய மாட்டேன். யார் வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு செல்லலாம். அது அவர்களுடைய இஷ்டம் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
1. பாராளுமன்றம் நீதி மன்றத்தினை அலட்சியம் செய்தால்(அவர்களுக்கு அதிகாரம் இருப்பினும்) அது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எந்த காரணத்தை கொண்டும் நீதி மன்றம் அலட்சிய படுத்தபா கூடாது.
2. நீதிமன்றத்தில் விளக்கம் கொடுப்பதை அல்லது தங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்று எடுத்து சொல்வதை பாராளுமன்றம் கடமையாக கருத வேண்டும். கொளரவ குறைச்சலாக எடுக்க கூடாது.

வைகோ வின் சந்தேகங்கள்.

வைகோ வின் சந்தேகங்கள்.
1. கருணாநிதி இந்த முறை எத்தனை இடம் கொடுப்பார்?
2. அதில் எத்தனை இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்?
3. கூட்டணி மாறி ஜெயலலிதாவிடம் போனால் நிறைய கிடைக்கும். ஆனால் வெற்றி வாய்ப்பு இருக்குமா?

திட்டங்கள்.
1. கட்சிகாரனை விட்டு கருணாநிதியை திட்டி அ.தி.மு.க, தி.மு.க இரண்டு பேருக்கும் சிக்னல் கொடுக்கலாம் -சீட் நிறைய வேணும் இல்லாவிட்டா ஒடிருவேன்.2. பல்ல கடிச்சுகிட்டு கருணாநிதியொடு இருந்திரலாம். பின்னாடி தி.மு.க தொண்டர்கள் பயன்படுவார்கள்.

பா.ஜ.க இந்த தேர்தலில் என்ன ஆகும்.

1. இவர்களோடு கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை. விஜயகாந்த் கூட இவர்களோடு சேர்வாரா என்பது சந்தேகமே.
2. இந்த முறை இவர்களுக்கு ஒரு சில தொகுதிகளிலாவது டெபாசிட் கிடைக்குமா?
3. இந்த தேர்தலின் சிறந்த "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்" அவார்டு பா.ஜ.க விற்கே.

தி.மு.க , விஜயகாந்த் மோதல் காரணம் ஏன்?

1. கருணாநிதிக்கு வேறு யார் கட்சி ஆரம்ப்பித்தாலும் பிடிக்காது. இன்னும் சொல்ல போனால் அவர் கட்சி காரனையே அவருக்கு பிடிக்காது அவர்களுக்கு செல்வாக்கு வளர ஆரம்பித்தால். அன்பழகன் போன்றவர்கள் மட்டுமே அவருக்கு தோது பட்டவர்கள்.
2. விஜயகாந்த் மண்டபம் இடிபட போகிறது. தி.மு.க நினைத்திருந்தால் தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால் அதை தி.மு.க. செய்யவில்லை.
இதோ ஆரம்ப்பித்து விட்டது சண்டை.
இனிமேல் கீ௯ழ்கண்ட விஷயங்கள் நடக்கும்.
1.சன் TV மெல்ல விஜயகாந்த் திரைபடங்களை மட்டம் தட்டும்.(ஆனால் படம் ஒடி விட்டால் உடனே உரிமைகள் வாங்கி திரையிடும்)2.விஜயகாந்தை திட்டி தி.மு.க பேச்சாளர்கள் அறிக்கை விடுவார்கள்.3.விஜயகாந்த் MPக்களை மட்டுமே திட்டுவார். மாநில அளவினால விஷயங்களுக்கு மாநில அரசு முதற் பொறுப்பு என்பது அவருக்கு மறந்து விடும்.

நல்ல தமிழ் எடிட்டர் ஏது?

முன்பு ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு PDF வடிவத்தில் இருந்த போது நான் "தமிழ்பேடு" என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தினேன். மிக நன்றாக இருந்தது அந்த அனுபவம். இப்போது ஆன்லைனில் எடிட் செய்கிறேன்.
தமிழில் நல்ல எடிட்டர்கள் உள்ளனவா?. ஏதெனும் ஒப்பன் சோர்ஸ் எடிட்டர் இருக்கிறதா?தகவல் கூறுங்கள்..

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!!!

விஜயகாந்த் முழக்கமிட்டிறுக்கிறார். அவருக்கு கொடுத்துதான் பழக்கமாம். எடுத்து பழக்கமில்லையாம். நான் , நான், நான் என்று தன்னை மையபடுத்தி செயல்படுவர்கள் , மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாசு வகையில் விஜயகாந்த் வருகிறார். இவரும் அவர்களை போலவே தான் வீரமுழக்கம், வெட்டி பேச்சு, வசனம் விட்டு கொண்டிருக்கிறார். விஜயகாந்தின் அரசியல் கட்சியின் மூல காரணம் சமூகசேவை இல்லை, அவருடைய அதிகார ஆசை.

தமிழ்நாடு தியேட்டர் இல்லை. வாழ்க்கை என்பது சினிமா இல்லை, தமிழர்கள் அனைவரும் அவருடைய இரசிகர்கள் என்பதை விஜயகாந்த் அவர்களுக்கு காலம் உணர்த்தும்.

அறிவு ஜீவிகளின் அராஜகம்.

சமிபத்தில் மற்றும் ஒரு கண்டன கூட்டம் நடை பெற்று முடிந்திருக்கிறது. இந்த முறை குட்டி ரேவதிக்கு ஆதரவாக , ராமகிருஷ்ணனுக்கு எதிராக...
இலக்கிய கும்பல் என்று சொல்லி கொண்டு திரியும் இவர்களின் நூல்களை படிப்பவர்கள் 4 ஆட்டோவில் ஏற்றி விடலாம். எண்ணிக்கையை மட்டும் நான் கணக்கில் எடுக்க போவதில்லை. ஆனால் தரம்...

எப்போதும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக தாக்கி கொண்டும் , மாற்றி மாற்றி அறிக்கை விட்டு கொண்டும் .. அரசியல் மேடைகள் போலவே இவர்கள் காட்சி அளிக்கிறார்கள்.

இதையெல்லாம் விட மற்ற ஊடகங்களயும் , வடிவங்களையும் இவர்கள் தாக்குவது முக்கியமாக இவர்கள் அவற்றை விட என்ன உயர்வாக சாதித்து விட்டார்கள்.

சினிமாவிற்கு வசனம் எழுதுவது பற்றி ஏகப்பட்ட ஏளனம் வேறு. இது உண்மையில் அறிவி ஜீவி அராஜகம். சினிமாவுக்கு எழுதுபவர்கள் எழுத்து வியாபாரிகளாம்... இவர்கள் மட்டும் இலவசமாகவா எழுதுகிறார்கள்.
கற்பனை வளவும், இயற்கை தன்மையும் இருக்கின்ற எந்த வடிவவும் நல்ல இலக்கியமே..

தி.க. வீரமணி யிடம் இருக்கும் பதவிகள்.

ஒட்டுமொத்தமாக பதவிகளை குத்தகைக்கு எடுத்து கொண்டுள்ளார் வீரமணி. அதை பட்டியல் போட்டு காட்டவும் செய்கிறார். கொள்கையாவது கொளுக்கட்டையாவது... பிழைக்கிற வழி காட்டும் வீரமணிக்கு ஜே....


President

Dravidar Kazhagam (A Leading Social Revolutionary Movement)

Periyar Maniammai Institute of Science and Technology- A Public Charitable Trust. Secretary

The Periyar Self-Respect Propaganda Institution (Periyar Trust - A Public Charitable Society, registered in 1952), Chennai.Patron

Tamil Nadu Rationalist Forum. Executive Director

International Institute of Periyar’s Philosophy and Ideology.Founder and Chairperson

Periyar Maniammai Free Clinics at Chennai, Vallam (Thanjavur), Salem, Trichy and Sholinganallur.Founder Member

Periyar Organization for Women Empowerment and Renaissance- POWER (a Public Charitable Trust)Founder

Founder Member and a Trustee of the Lawyers’ Forum for Social Justice. (Regd. Office, New Delhi)

Periyar Centenary Polytechnic College, Vallam - Thanjavur.

Periyar College of Pharmaceutical Sciences for Girls - Trichy.

Periyar I.A.S. & I.P.S. Coaching Centre, Chennai.

Periyar Maniammai College of Technology for Women, Vallam - Thanjavur (The first Engineering College exclusively for Women in the World).

Periyar Community College of Continuing Education, Vallam - Thanjavur.

Periyar Centenary Memorial Matriculation Higher Secondary School, Trichy.

Periyar Computer Research Academy, Chennai.

Periyar College of Advanced Computer Education, Trichy.

Periyar Centre, New Delhi.

Periyar Organisation for Bio-Technic and Eco-System, Thanjavur.

Periyar Renewable Energy Training Institute.

Periyar Centre for Energy and Environment Management.

Periyarism Seminary.

Innovative Maestro Periyar Rural Entrepreneur Service Scheme - IMPRESS.

Periyar Centre for Cancer Detection and Prevention.

Periyar Club of Organ Donors.
MEMBER

International Humanist and Ethical Union.

British Humanist Society, England.

மேலும் விப்ரஙகளுக்கு
http://periyar.org/html/dk_veeramani_eng.asp

தமிழ்மணத்தின் வெற்றி.

இந்த பதிவு தமிழ்மணத்தையும் , காசி அவர்களையும் முழுமையாக பாராட்ட எழுதப்பட்டுள்ளது. தமிழ் மணத்தின் வெற்றிக்கான காரணங்கள் ஆராய்வது மிக எளிது.
1. தொடரபடுகிற எந்த ஒரு முயற்சியும் பயனை கொடுத்தே தீரும்.

2. மேலும் மேலும் சிறப்பான அம்சங்கள் ஒரு முயற்சியோடு இணையும் போது அது வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

பத்திரிக்கைகள், திரைபடம்,தொலைகாட்சி என்று அனைவராலும் அழிக்க படும் தமிழ் உண்மையில் தமிழ் ப்லொகுகளில் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறது. சின்ன சின்னதாக ஆங்காங்கே காணபடும் சிறு குறைபாடுகளை மறந்து விடலாம்.
காசி தன்னுடைய வாழ்நாள் சாதனியாக தமிழ்மணத்தை கருதலாம். புது வடிவம் பெற்று மேலும் சிறப்பாக இருக்கும் தமிழ்மணத்திற்கும் , காசியின் தமிழ் மனதிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


தமிழ்மணத்தின் வெற்றி - காசியின் தமிழ் மனதின் வெற்றி...


குமுதம் விகடன் தாழ்ந்தது ஏன்?

வரவர குமுதம், விகடன் இரண்டும் விஷயமே இல்லாத வெற்று பத்திரிக்கைகள் ஆகிவிட்டன. சரியாகசொல்ல போனால் குமுதம் குப்பையாகி வெகு நாளாகி விட்டது. விகடன் அந்த வரிசையில் இப்போது சேர்ந்து விட்டது. தமிழில் வேறு நல்ல பத்திரிக்கைகள் இல்லாத நிலையில் விகடனும் சோரம் போனது எனக்கு மிகுந்த வருத்தம்.
1. தொடர்கதைகள் காணமல் போனது ஏன்?. நல்ல கதைகள் வந்தால் மக்கள் கண்டிப்பாக படிப்பார்கள்.2. ஒரு சில பக்கங்களே இரண்டு பத்திரிக்கைகளிலும் தேறுகின்றன.
உண்மையில் சொல்ல போனால் இப்போது நான் தமிழ்மண ப்லொகுகள் படிப்பதை நிறையவே விரும்ப்புகிறேன். தமிழ் பத்திரிக்கைகள் சரக்கு காலியாகி விட்டதா?

சோ ராமசாமியின் கருத்துக்கள்...

இந்த முறை ஜெயலலைதாவற்கு வாய்ப்பு இருக்கின்றது என்று சோ பேசியிருப்பது அவருடைய கணிப்பு திறனை விட அவருடைய ஆசையை காட்டுகிறது. ஜெயலலிதாவை பற்றி ஒரு நல்ல அபிப்ராயம் விளைந்திருந்தாலும் வலிமையான கூட்டணி அமைக்கின்ற கட்சியே இங்கு வெற்றி பெறுகின்றது. கூட்டணியை கலைஞர் காப்பாறி விட்டால், அது அவருக்கு வெற்றியை கொடுத்து விடும். ஸ்டாலினிக்கு வாய்ப்பு கொடுக்க கலைஞர் தி.மு.கவை கூட அடகு வைப்பார்.
ஆனால் தனிப்பட்ட முறையில் ஜெயலலிதா ஒரளவு நன்றாகவே ஆட்சி தர முயன்றார். அவர் தொடரவேண்டும் என்பது சோவின் ஆசை. அது அவரை தடுமாற வைக்கிறது.
தொடர்ச்சியாக இரண்டு வாய்ப்பு இரண்டு பேரில் யாருக்கு கொடுத்தாலும் அது அபாயகரமானதாகவே முடியும். மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் ஜெயலலிதா தனது சுயரூபத்தை காட்டுவார்.
5 ஆண்டுக்கு ஒருமுறை கேரளா ஸ்டைலில் இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

தமிழில் படித்து மகிழ நல்ல வெப்சைட்டுகள்.

எக்கசக்கமான தமிழர்களின் ப்லொகுகளை தமிழ்மணத்தில் காண முடிகிறது. காசிக்கு மிக்க நன்றி. அதையும் தாண்டி மற்றும் சில் நல்ல வெப்சைட்டுகளை வெளி கொணர்வதே இந்த பதிவின் நோக்கம்.அனைத்து தமிழ்மண நண்பர்களே, வாருங்கள் ...
உங்களுக்கு தெரிந்த வெப்சைட் முக்வரி கூறுங்கள். இந்த பதிவினை நான் தொடர்ந்து புதிப்பித்து கொண்டு இருப்பேன்.


செய்திகள்.
www.thatstamil.com
www.dinamalar.com

பத்திரிக்கைகள்
www.vikatan.com
www.kumudam.com

கட்சிகள்
www.thedmk.org

சினிமா
www.cinesouth.com
www.tamilcinema.com

குமுதத்தில் சிவாஜியின் கதை....

ரஜினி ஒரு ரூபாய் வைத்து கொண்டு கோடி கணக்கில் சம்பாதிக்கிறாராம். ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா முன்னர் முதலமைச்சராக இருந்த போது. அவருக்கு கட்டுபிடியாகும். மற்றவர்களுக்கு முடியுமா?.
இறுதியில் ரஜினி சம்பாதித்த அனைத்தையும் மக்களுக்கு எழுதிவைத்து விட்டு ஒரு ரூபாய் மட்டுமே எடுத்து கொள்கிறார். இது தான் கதை என்று குமுதம் சொல்கிறது.
நான் எழுதிய கதை எவ்வளவோ மேல் என்றே எனக்கு தோன்றுகிறது.
தவமாய் தவமிருந்து , ஆட்டோகிராப் போன்ற படங்களை வெற்றி கொள்ள செய்த மக்கள் இதையும் ஒட வைப்பார்கள்.

ட்ராவிடும் சேவாகும் தொடர்ந்து துவக்க ஆட்டம் ஆடலாமா?

என்னுடைய பதில் ஆம். இதை மறுத்து கூறுபவர்கள் ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். சேவாக் கூட ஒரு ஆரம்பகால துவக்க ஆட்டகாரர் அல்ல. மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் மட்டுமே. அவரை நீக்க டீமுக்கு மனமில்லாததாலும் துவக்க ஆட்டகாரர்கள் இல்லாதாலும் அவர் துவக்க ஆட்டகாரராக அனுப்ப பட்டார். தொடர்ந்து வெற்றி கொடி நாட்டினார். சேவாக் துவக்க ஆட்டகாராரக அனுப்ப பட்ட போது அது கடுமையாக விமர்சிக்க பட்டது. அது இந்தியா சேவாக் இருவருக்கும் நல்லதல்ல என்றெ கூறப்பட்டது. ஆனால் சேவாக் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.
நல்ல துவக்க ஆட்டகாரர்கள் கிடைக்காத பட்சத்தில் திராவிட் ஆட்டத்தை துவங்கினால் என்ன?. தொடர்ச்சியாக ஆட்டத்தை துவக்கினால் அவர் அதில் வெற்றி பெறுவார் என்றே நான் கருதுகிறேன். இது நம்முடைய அணிக்கும் மேலும் ஒரு பேட்ஸ்மன் அல்லது பந்து வீச்சாளரை கொண்டு வர உதவியாக இருக்கும். எனவே இது தொடரவேண்டும்.
துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய திராவிடுக்கு ஜே...

பதவி நீக்கம் செய்தது சரியா?

உண்மையில் கோர்ட்டுக்கு இந்த அதிகாரம் இல்லை என்று சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது கோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
1. இதையடுத்து , சபாநாயகர் பதிலளிக்க மறுத்தால் அது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும்.2. பாராளுமன்ற முடிவை விசாரிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருக்கிறாதா?
அறிந்தவர்கள் எழுதினால் உபயோகமாக இருக்கும். பதவி நீக்கம் செய்யபட்ட போது அதை ஆதரித்த மீடியா இப்போதும் அதனை வலியுறுத்தி எழுத வேண்டும். சிறிய தண்டனை என்ற போதிலும் இது ஒருவ் வித பயத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Monday, January 16, 2006

பரத் - ப.சிதம்பரம் கூட்டணி.

விஜயை தயாநிதி மாறன் இழுத்து கொண்டதாலும், ரஜினி சந்திரமுகி,சிவாஜி என்று காசு பார்க்க போய்விட்டதாலும் ப.சிதம்பரம் எதிர்காலம் கருதி காதல் கதாநாயகன் பரத் அவர்களை சந்த்தித்தார். பரத் இரசிகர்கள் காமராஜர் ஆட்சி அமைக்க பெரிதும் உதவுவார்கள் என்று சோனியாவிடம் சிதம்பரம் யோசனை கூறியிருப்பதாக தெரிகிறது.
தி.மு.க. , அ.தி.மு.க இரண்டுக்கும் மாற்றாக முன்றாவது அணியை உருவாக்க சிதம்பரம் வெகுகாலாமாக முயன்று வருவது அனைவரும் அறிந்ததே.
ஒரு பக்கம் அரசியல் மாற்றத்தை பரத் விரும்பினாலும், தனது சுதந்திரத்தையோ அல்லது இரசிகர்களின் உழைப்பையோ இழக்க பரத் விரும்ப்பவில்லை என்றே அவருடன் பாய்சு படத்தில் இணைந்து நடித்த மணிகண்டன் கூறுகிறார்.
பரத் வெகு விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று சிதம்பரமும் , பரத்தின் இரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

0+15 < 25 கணக்கு சரியா?

1.கடந்த பாராளுமன்ற தேர்தலில் வைத்து பார்க்கும் போது அ.தி.மு.கவுக்கு ஒரு சீட் கிடைக்கவில்லை.ஆனால் அது உண்மையான ஆதரவை பிரதிபலிக்கிறதா?.2. அ.தி.மு.க வை விட சிறிய கட்சிகளான பா.ம.க, ம.தி.மு.க, காங்கிரசு, கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றுள்ளன்.
3. ஆக மொத்தமாக தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் இணைந்து பெற்ற தொகுதிகள் 15. மற்ற கட்சிகள் வசம் உள்ள் தொகுதிகள் 25. இது தான் இந்த கட்சிகளின் பலமா?.கண்டிப்பாக இல்லை.
4. பெரும்பான்மையானவர்கள் நினைப்பே ஜனநாயகம் என்றால் இந்த நிலை உண்மையான ஜனநாயகமா?. இங்கே சிறு கட்சிகள் அல்லவா கூடுதல் பலம் பெற்றுள்ளனவே?
அடிப்படையிலேயே எங்கோ தவறு நடந்து விட்டது. அதை கண்டுபிடிக்கும் வழி சொல்லுங்கள். இந்த குளறுபாடுகளின் காரணமாகத்தான் இராமதாசு போன்றவர்களை, வைகோ போன்றவர்களை எல்லாம் நாம் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல் வோட்டு வேட்டையிலுருந்து மாறி உண்மையான ஆதரவை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
(ஒரு சிறு குறிப்பு).உண்மையில் தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு(20+20) செய்து கொண்டால் , 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். அது இரண்டு கட்சிகளுக்கும் இப்போது இருக்கிற பாராளுமன்ற தொகுதிகளை விட அதிகமே...
இந்த இரண்டு கட்சிகளும் உடன்பட்டால், எளிதாகவே தமிழக அரசியல் அசிங்கங்களான ம.தி.மு.க,பா.ம.க, காங்கிரசு அனைத்தையும் காலி பண்ணிவிடும்.

சுதந்திர நாட்டின் அடிமை மக்கள்

மீண்டும் மீண்டும் அரசியல் பற்றி எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தமிழக அரசியல்வாதிகளில் மிக கடுமையாக விமர்சிக்க படும் ராமதாசு மற்றும் திருமா வளவன் பற்றிய கட்டுரை இது.
1.தான் சார்ந்த சாதி அமைப்புகளை வலிமை படுத்தி அரசியலில் நுழைந்தவர்கள் இருவரும்.
2. அரசியலில் நுழைந்த பொழுது யாருமே அறிவிக்காத சத்தியங்களை ராமதாசு செய்தார். அதை முற்றிலுமாக கடைபிடித்தார். உண்மையிலேயே பொது வாழ்வில், பா.ம.க. கட்சி ஒரு வித்தியாசமாக காட்சி அளித்தது. அதே போன்று, திருமா வளவன் மாவட்டம் தோறும் தாழ்த்த பட்ட மக்களுக்காக போரட்டம் நடத்தினார். அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற சலுகைகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தினார். அவர்கள் சாணி அள்ளுவதற்கும் மலம் அள்ளுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் மனித உரிமைகள் பற்றியும் கல்வி அறிவு பற்றியும் அறிந்து கொள்ள வைத்தார். இந்த மாதிரி நல்ல நடைமுறைகளை பயன்படுத்திய போது அவர்கள் வெற்றி பெறவில்லை.
3.இந்த இரண்டு பேரையும் குறை கூறுகிற மக்கள் அனைவரும் கவனிக்காத ஒன்று. இவர்கள் இருவரும் கொள்கையாவது கொளுக்கட்டையாவது என்று அனைத்தையும் புறக்கணித்து விட்டு, சுயநலமாக செயல் பட ஆரம்பித்த பின்னர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.ராமதாசு அனைத்து சத்தியங்களையும் தாரை வார்த்தார். இன்று பா.ம.க. ஒரு தவிர்க்க முடியாத( தவிர்க்க பட வேண்டிய கட்சியாக இருந்தாலும்) கட்சியாக மாறிவிட்டது. உருப்படியாக எத்தனையோ காரியங்கள் திருமா செய்த போது வராத கூட்டம் , இன்று அவர் தமிழக பெண்கள் கற்பை குஷ்பூ வீட்டு காக்கா தூக்கி விட்டு சென்று விட்டது என்று குரல் கொடுக்கிறார். தனக்கு எந்த பிரயோஜனமும் கிடைக்காது என்பதை உணராமல் இந்த கூட்டம் விளக்குமாறு எடுத்து கொண்டு ஒடுகிறது.
அரசியல் வாதிகளை மற்றும் குறை சொல்லி பயனில்லை. மக்கள் தலைவனுக்கு அடிமையாக இருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த கூட்டம் சுயமாக சிந்திக்க வக்கில்லாமல் அடிமையாக வளரும் கூட்டம். அதனால் தான் காலில் விழுவது, பச்சை குத்துவது, போஸ்டர் அடிப்பது என்று தமிழக அரசியல் சாக்கடை ஆகிவிட்டது. அ.தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதா என்று பெயர் சொல்ல முடியாது. தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதி என்று பெயர் சொல்ல முடியாது.அ.தி.மு.க. கூட்டத்தில் கருணாநிதியை ஒற்றை கண்ணன் என்று சொல்லலாம். தி.மு.க. கூட்டத்தில் ஜெயலலிதாவை இதை காட்டிலும் மிக கேவலமாக விமர்சிக்கலாம்.ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்களை அடிமைகளை விட கேவலமாக நடத்துவார். கருணாநிதி தன் வாரிசுகளுக்கு இணையாக யாரையும் வளர விட மாட்டார். இது இப்போது ராமதாசுக்கும் பொறுந்தும்.ஆனால் இதையெல்லாம் உணராத இந்தகூட்டம் இவர்கள் என்ன சொன்னாலும் தலையாட்டி கொண்டிருக்கிறது.இவர்களோடு கூத்தாடி பயல்களுக்கு போஸ்டர் அடிப்பவர்களையும் சேர்த்து கொள்ளலாம். வாய்ப்பு கிடைத்தால் இந்த கூத்தாடி பயல்கள் அரசியல் வாதிகளை விட மோசமாக ஆட்சி செய்வார்கள்.


தனக்கு என்று ஒரு சுய புத்தியில்லாமல் கட்சி தலைவன் என்ன செய்தாலும் அதை குருட்டு தனமாக பின் பற்றும் மக்கள், சுதந்திரமான நாட்டினிலும் அடிமைகளாகவே இருப்பார்கள்.

இப்படி அடிமையாக இருப்பது விசுவாசமகவே கருத படுகிறது. நான் தான் பெரிய அடிமை, என்னை காட்டிலும் பெரிய அடிமை யாருமில்லை என்று காட்ட ஒவ்வொரு கட்சியிலும் ஒரு போராட்டமே நடைபெறுகிறது. இந்த அடிமை புத்தி சுதந்திரம் வாங்கியதை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

என்ன பிட்சோ, என்ன மாட்சோ?.

அவங்க ஒரு 679 , நம்ம 403 ஒரு விக்கெட் கூட விழவில்லை. என்ன பிட்சோ, என்ன மாட்சோ?.எனினும் என் கணிப்பு 3-0 தவறாக போனது சந்தோஷமே...

பதவியை இராஜினாமா செய்வது எப்படி.

பா.ம.க தலைவர் ஒவ்வோரு தேர்தலுக்கும் கூட்டணி விட்டு கூட்டணி தாவுவார். இந்த முறை அவர் தாவவில்லை. (ஏனெனில் மகன் மத்திய அமைச்சராக தொடர விரும்புகிறார்.) தமிழத்தில் நல்ல மழை பெய்தற்கு இது கூட காரணமாக இருக்க கூடும்.
இந்த முறை அவர் தாவாத குறையை அவர் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியிறுக்கிறார்கள். இன்னும் 4 அல்லது 6 மாதங்களே இருக்கும் போது அவர்கள் தாவியிருக்கிறார்கள். என்ன காரணம் ?. அதற்கா பஞ்சம்? தாவுதல் ஸ்பெஷலிஷ்ட் கட்சியில் இருந்த அவர்களுக்கு தாவுவதற்கு காரணம் கண்டு பிடிக்க முடியாதா?
காரணம் கூறுகிறார்கள் பாருங்கள். பா.ம.க வில் தாழ்த்த பட்டவர்களுக்கு முக்கியத்துவம் இல்லையாம். அவர்கள் புறக்கணிக்க படுகிறார்களாம். அப்படி பார்த்தால் இவர்களுக்கு இந்த பதவி எப்படி கிடைத்தது? புறக்கணிப்பது என்றால் பதவி கொடுக்காமல் அல்லவா புறக்கணிக்கத்திறுக்க வேண்டும். ஏன் சட்ட மன்ற உறுப்பினர் பதவி கொடுத்து புறக்கணிக்க வேன்டும்?இதற்கு மேல் இந்த காரணத்தை ஆராய்வது வீண்.
பதவி இன்னும் கொஞ்ச நாளில் அதுவாகவே காலி ஆகி விடும் என்ற நிலையில் இவர்கள் கட்சி தாவியிருக்கிறார்கள். இராசினாமா செய்து விட்டோம் என்று பெருமை வேறு.
இவர்கள் இராஜினாமா செய்யவிட்டால் பதவி கட்சி தாவல் தடை சட்ட படி காலியாகி விடும். அது தான் இவர்கள் இராஜினமா செய்ததற்கு காரணம்.
பதவியை எப்படி இராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் எடுத்து காட்டியிருக்கிறார்கள்...
இராமதாசு சத்தியத்தை கடைப்பிடிப்பது எப்படி என்று காட்டினார். மகனுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை சத்தியத்தை கடைபிடித்தவர் , வாய்ப்பு வந்தவுடன் சத்தியத்தை தாரைவார்த்தார். அது போல இவர்கள் பதவியை இராஜினாமா செய்வது எப்படி என்று காட்டியிருக்கிறார்கள்.


இன்னமும் தேர்தல் அறிவிப்பே வரவில்லை. அதற்குள் இப்படி... இன்னும் என்ன காட்சிகள் காத்திருக்கின்றனவோ?
யார் கண்டார், இராமதாசு கூட தாவ மாட்டார் என்று சொல்ல முடியாது(!!!!!!!!!)

தமிழின் சிறந்த பதிவாளர்கள்.

இது முழுக்க முழுக்க என்னுடைய இரசனையை வெளிப்படுத்துகிற ஒரு வரிசை. வோட்டின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டதல்ல.
1.சிரிகாந் மீனாக்ஷி.
2.முகமூடி.
3.ராகவன் ஸ்ரினிவாசன்
4. குழலி.
5. கொசப் பேட்டை குப்புசாமி.
முறையே அவர்களுடைய பதிவுகளின் கவரி.
http://kurangu.blogspot.com/
http://www.mugamoodi.blogspot.com/
http://dondu.blogspot.com/
http://kuzhali.blogspot.com/
http://kosappettai.blogspot.com/

Sunday, January 15, 2006

கார்த்திக் தலைவராகிறார்.

இவரை வைத்து படம் எடுப்பதற்காகவே ஒரு அவார்டு கொடுக்கலாம் என்ற அளவுக்கு நல்ல பேர்(?) வாங்கியிருக்கும் கார்த்திக் இன்று ஒரு கட்சியின் தலைவர்(அந்த கட்சி எப்படி பட்ட கட்சி என்பதற்கு ஒரு தனியான பதில் தேவையா?.)
அ.தி.மு.க வோடு கூட்டணி வைத்து சட்ட மன்ற உறுப்பினர் ஆகி விடலாம் என்ற கணக்கு போட்டிறுக்கிறார் கார்த்திக். எல்லா படமும் பொட்டியில் கிடப்பதினால் வேறு வழியில்லாமல் மக்கள் சேவை.
முந்தி, முந்தி விநாயகரே, முப்பத்து முக்கோடி தேவர்களே... என்பார்கள்.கார்த்திக் நம்புவது விநாயகரை இல்லை, தேவர்களை ....

பாரதியார் புகழ பட வேண்டிய கவிஞனா?

1. தன் குடும்பத்தையே சரியாக கவனிக்காமல் பட்டினியில் விட்டு விட்டு, தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்று கூறுவது கேலிக்கூத்து.
2.தன் மனைவியை அவமான பட விட்டுவிட்டு பெண் உரிமையை பற்றி பேசுவது அதைக்காட்டிலும் பெரிய கூத்து.

பாரதி ஒரு அந்த கால சிதம்பரத்தில் ஒரு அப்புசாமி. இன்றைய கவிஞர்கள் பலர் அவரை தாண்டி வெகு தூரம் சென்று விட்டார்கள்.

குட்டி ரேவதி என்ற பெயரில் என்ன இருக்கிறது?.

ஒரு திரைப்படத்தில் ஒரு வரியில் குட்டி ரேவதி என்ற பெயர் வருவதனால் என்ன தவறு இருக்கிறது?. இதற்காக ஒரு எழுத்தாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?. இதில் ஆண் , பெண் பாகுபாடு பற்றிய முழக்கங்கள் வேறு. இந்த வசனம் நான் எழுதியதில்லை என்று அந்த எழுத்த்தாளர் மறுத்த பின்னர் மீண்டும் அதை கண்டித்து கோஷம் ஏன்?.

உண்மையில் அப்படி கண்டணம் தெரிவிக்கும் வண்ணம் அந்த வசனம் அத்து மீறலாக கூட காட்சி அளிக்கவில்லை. இதில் மிக பெரிய ஆச்சரியம்,உள்நோக்கம் உண்டு என்று தெளிவாக தெரியாத நிலையிலேயே இதற்கு ஒரு கண்டண கூட்டம் வேறு.

அத்து மீறியவர் ராமகிருஷ்ணன் இல்லை. இல்லாத ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் இந்த பெண் கவிஞர்களும், அதை ஆதரிக்கும் அனைவரும். ராமகிரிஷ்ணன் பற்றி கீழ்தரமாக இவர்கள் இமர்சிப்பதனால் அவருடைய புகழுக்கு இழுக்கு வரபோவதில்லை.

அப்படியே இவர்கள் சொல்வது உண்மை என்று வைத்து கொண்டாலும் இராமகிருஷ்ணன் இவ்வாறு குட்டி ரேவதியை தாக்கி எழுத வேண்டிய நோக்கம்(motive) என்ன?. அப்படி என்ன அவர்களுக்குள் பிரச்சினை?. உண்மையில் அவ்வாறு ஏதுமில்லை.

இராமகிருஷ்ணனை தாக்குபவர்கள் இதற்கு விளக்கம் அளிக்கட்டும். நன்றாக எழுத முடியாவிட்டாலும் பரவாயில்லை, நல்ல எழுத்தாளனை தொந்தரவு செய்யாமல் இருங்கள்.

பிரச்சினை குட்டி ரேவதி என்ற வசனத்தில் இல்லை. அந்த பெண் கவிஞரிடத்தில் உள்ளது.

அடுத்த ரஜினி யார்?.


கண்டிப்பாக விஜய் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்ல போனால், விஜய் ரஜினியை விட ஒரு படி மேலே(கீழே) செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. விஜயின் படங்கள் வரவர ரஜினியின் படங்களை விட படு மட்டமாக இருக்கின்றன. ஆனாலும் படு ஒட்டம் ஒடுகின்றன. ஏன் என்றே புரியவில்லை.

சமீபமாக, மன்மோகன் சிங் தபால்தலை வெளியிட , விஜய அதை பெற்று கொண்டார். இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க படும் அளவுக்கு விஜய் என்ன செய்திறுக்கிறார். தமிழில் எவ்வளவோ எழுத்தாளர்கள், கவிஞர்கள், தேசிய விருது பெற்றவர்கள் , சாதனையாளர்கள், அறிவாளிகள் இருக்கிறார்கள். சினிமாதுறையிலும், பலர் உலக சாதனை புரிந்தவர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்கெல்லாம் கிடைக்காத பெருமை இவருக்கு ஏன்?
தயாநிதி மாறனும், விஜயின் தந்தையும் நெருங்கி வருவதை பார்க்கும் போது, இன்னும் 10 வருஷத்தில் விஜய், ஒரு மைக் பிடித்து கொண்டு, யாருக்கு ஒட்டு போடவேண்டும் என்று பேட்டியளிப்பார். அதை கேட்டு கொண்டு இரசிகர்களும் வேலைசெய்வார்கள்.
எல்லாம் தமிழனின் தலையெழுத்து... ரஜினி மாதிரி ஒரு குப்பை போவதற்குள் அடுத்த குப்பை வருவது...

ஜெயலலிதா கனவு காண்கிறார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கிடைக்காமல் திண்டாடுகிறது. சீட் கொடுக்க கலைஞர் தயாராக இருந்தாலும் போட்டியிடுவதற்கு மக்கள் தயாராக இல்லை. கலைஞர், ஸ்டாலின் மற்றும் அன்பழகன் மட்டுமே போட்டியிடுகின்றனர். டெபாசிட் கூட கிடைக்காது என்ற பயத்தினால் மற்ற கட்சிகள் போட்டியிலுருந்து ஒதுங்குகின்றன. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெறுகிறது.ஜெயலலிதா வெற்றி அடைந்த அடுத்த் நிமிடமே , அரசு ஊழியர்கள் அனைவரும் கைது செய்ய படுகிறார்கள். பர்னாலா பஞ்சாப் ஒடிவிடுகிறார். சசிகலா வீட்டு சமையகாரர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அறிவில்லாதவர்களுக்கு மட்டுமே மந்திரி பதவி என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். எனக்கு அறிவில்லை என்று கூறி அனைவரும் மந்திரி பதவியை பெற்று கொள்கிறார்கள்.

கலைஞர் கனவு காண்கிறார்

பாசக்கிளிகள் படம் ஆதி,பரமசிவன் ஆகிய படங்களை விட அதிக பரபரப்புடன் ஒடுகிறது. சந்திரமுகி பட ரெக்கார்டை ஒரே வாரத்தில் முறியடிக்கிறது. கூட்டணியிலிருந்து மற்ற கட்சிகள் , தி.மு.க. எத்தனை இடங்கள் கொடுத்தாலும் மறுபேச்சு பேசாமல் வாங்கி கொள்கின்றன. தயாநிதிமாறனை அகில இந்திய அளவில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. பில்கேட்ஸ் கலைஞரின் கொள்கைகளால் கவர பட்டு தி.மு.க. வில் உறுப்பினராக சேருகிறார். தேர்தலில் தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டு 150 லில் வெற்றி பெறுகின்றது.ஆனால் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மீதி இடங்களில் தோல்வி அடைகின்றன. ஆனால் அ.தி.மு.க வும் அனைத்து இடங்களையும் தோல்வி அடைகிறது. 84 சுயேட்சைகள் வெற்றி பெறுகிறார்கள். அவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். அதை தொடர்ந்து அனைத்து தமிழக கட்சிகளும் கலைக்க படுகின்றன. அனைத்து கட்சிதலைவர்களும் தி.மு.க. வில் இணைகிறார்கள்.


தினமலரில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு.

எனக்கு சில நாள்களுக்கு முன்பு மட்டுமே தெரிந்த செய்தி- தினமலரில் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு பற்றி வந்துள்ளது. கீழ்கண்ட யு.ஆர்.ல். கிளிக் செய்க.

http://www.dinamalar.com/2005dec01/flash.asp

அனைவரின் ஆதரவுக்கு நன்றி.

Friday, January 13, 2006

2006 தேர்தல் எப்படி இருக்கும்?.

1. கண்டிப்பாக ஜெயலலிதா வெற்றி பெறமாட்டார். அ.தி.மு.க 25 லிருந்து 30 இடங்கள் வரை பெறும்.
2. தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.
3. கலைஞர் மீண்டும் ஒரு முறை முதல்வராவார். அல்லது அன்பழகனுக்கு அந்த வாய்ப்பு அளிக்க படும்.
4. ராமதாஸ் மற்றும் வைகோ கூட்டணியிலிருந்து பிரிய மாட்டார்கள்.
5. திராவிட கழங்களின் பிடியிலிருந்து மெல்ல தமிழகம் நழுவுகின்றது.
6. அரசு ஊழியர்கள் இந்த தேர்தலின் நிர்ணய சக்திகளாக இருப்பர்.
7. சிறுபான்மையினரின் ஒட்டு கருணாநிதியின் கனவை நனவாக்கி விடுவார்கள்.
8. சலுகைகள் வாரி இறைக்க படுவதாக தோன்றினாலும் அவை மக்களை ரீச் பண்ணவில்லை.
9. வைகோ , ம.தி.மு.க இரண்டையும் இந்த தேர்தல் அழித்து விடும்.
10. பா,ம.க வுக்கும் இந்த தேர்தல் ஏமாற்றத்தையே தரும்.

ஆதி மற்றும் பரமசிவன்....

1. இரண்டு மற்றுமொரு குப்பை படங்கள் வரப் போகின்றன.
2. விஜய் அடுத்த ரஜினியாக உருவாகிறார். அதில் சந்தேகமே இல்லை.
3. அஜித்தின் இந்த படமும் தோல்வியாகவே அமையும். அது அந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.
4. சரவணன் சிம்புவுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
5. புதுப்பேட்டை செல்வராகவனை ஒரு படி மேலே உயர்த்தும்.
6. பாசகிளிகள் - தி,மு,க,வின் வெற்றி வாய்ப்பை கூட பாதிக்கும்.

Thursday, January 12, 2006

நான் ஒரு தடவை சொன்னா?

ரஜினி ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி அப்படின்னா, ஒரு விஷயத்தை ரஜினி 108 தடவை சொல்லணும்னா என்ன பண்ணுவார்?

Wednesday, January 11, 2006

படிக்காமல் வாங்கிய பட்டம்

நாட்டில் எல்லாரும் தான் ஜாதி மாநாடு நடத்துகிறார்கள். பிராமணர்கள் நடத்துவதை மற்றும் ஏன் தனியாக குறை கூறவேண்டும். உண்மையில் அனைவரும் செய்கின்ற தப்பை பிராமணர்களும் செய்திருக்கிறார்கள். மாநாடு போடுவது, ஜாதி பெருமை பேசுவது , வீண் வீரம் பேசுவது என்று எல்லா விதமான எல்லா ஜாதி மாநாட்டிலும் நடக்கின்ற அருவருக்க தக்க அசிங்கங்கள் இங்கும் நடந்தன.
யாரும் எதிர்பாராதது சுஜாதா மற்றும் பாலசந்தர் பேசியது. இன பெருமைகளை இவர்கள் பேசியது இவர்களின் எக்கச் சக்கமான இரசிகர்களின் மனதில் உண்மையான அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். சுஜாதா வெளிப்படையாக காட்டி கொள்ள விட்டாலும், தனது இனபாசம் அவருடைய எழுத்துக்களில் வெளிப் பற்றிறுகிறது. ஆனால் பாலசந்தரின் பேச்சு எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. பாலசந்தரின் திரைப்பட வீச்சுகளினால் , எனக்கு அந்த பெயரை வைத்தார்கள். பாலசந்தர் மாநாட்டில் இதுவரை கலந்து கொள்ளாது பற்றி மிக்க வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் ஜாதியின் வேர்கள் மிக ஆழமானவை. சமுகமும் அரசியலும் அதற்கு காலம் காலமாக நீர் ஊற்றி வருகின்றன. இப்போது அதற்கு அசைக்க முடியாத பலம் வந்து விட்டது. கூடி வாழும் சமுகத்தில் மற்றவர்களால் ஒதுக்கி வைக்க படுவோமா என்ற பயத்திலேயே ஒவ்வொருவரும் ஜாதியின் பிடியிலிருந்து மீள முடியுமால் தவிக்கிறார்கள்.
ஜாதி படிச்சு வாங்கின பட்டமா என்று வேதம் புதிது படத்தில் ஒரு கேள்வி வரும்?. அதை எழுதியவற்கு தெரியவில்லை- ஜாதி படிக்காமேலேயே , பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் சமுகத்தால் வழங்கபடும் பட்டம் என்று.

Sunday, January 08, 2006

மூன்றாவது அணியும் கூத்தாடி பயல்களும்.

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் மரணத்த்லிருந்து விவாதிக்கப் பட்டு வருவது மூன்றாவது அணி, மற்றும் கூத்தாடி பயல்கள் வெற்றி பெற வாய்ப்பு உண்டா என்பதும்.
1. 1996-யில் ரஜினியின் பங்கு மிக பரபரப்பாக பேச பட்டது. ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையை உருவாக்கியது ரஜினியோ, கருணாநிதியோ மூப்பனாரோ இல்லை. அதை உருவாக்கியது ஜெயலலிதா மற்றும் சசிகலா.
2. ரஜினியே ஜெயலலிதாவை எதிர்த்து தனது இமேஜை உயர்த்தி கொண்டார். ஆனாலும் கூட 1996 இல் மூப்பனாரும் ரஜினியும் சேர்ந்து நின்றிருந்தால் கூட அது தனியாக ஆட்சியை பிடித்திருக்காது. மாறாக அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கும்.மேலும் அன்று நரசிம்மராவுக்கு பதில் ராஜீவோ,சோனியாவோ இருந்திருந்தால் மூப்பனார் தனி கட்சி ஆரம்ப்பித்து இருப்பாரா என்பது சந்தேகமே.
3. மாறி மாறி கருணாநிதியோடும் ஜெயலலிதாவோடும் கூட்டணி வைத்து பிழைப்பு நடத்தும் மற்ற கட்சிகள் உண்மையில் இரண்டையும் விட மோசமனவை. இவர்களுக்கு ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ மேல்.
4. எம்.ஜி.ரை தவிர தனிப்பட்ட செல்வாக்கு (அரசியல் ரீதியான) யாருக்கும் இல்லை.
5. ஒரு தனி மனிதனை தெயவத்திற்கு இணையாக ஒப்பிடுகிற இரசிகர்கள் கூட்டம், அரசியல் கட்சியாக மாறினால் எப்படி இருக்கும். விஜயகாந்த் ஆரம்பித்திருக்கும் கட்சி( இதை கட்சி என்று கூற முடியுமா?)யின் சட்ட திட்டம் என்ன தெரியுமா?. அவர் வைத்ததே சட்டம்.இதனால் தான் கட்சிக்கு அங்கிகாரம் மறுத்திறுக்கிறது தேர்தல் கமிஷன். இப்படி தன் கட்சிக்காக உழைக்கிறவர்களுக்கு கூட கருத்து சொல்லும் உரிமை மறுக்கிற தலைவன் நாட்டு மக்களுக்காக குரல் கொடுப்பானா?. எதற்காக இப்படி ஒரு சிந்தனை ஒரு தலைவனுக்கு. தன்னுடைய சர்வாதிகாரம் காத்து கொள்ள விதி அமைக்கும் தலைவன் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் மாற்றா?
6. விஜயகாந்தின் நிர்வாக திறமை மற்றும் தைரியம் பற்றி பல பத்திரிக்கைகள் புகழுகின்றன.(புளுகின்றன). நடிகர் சஙகத்தினை திறமையாக நிர்வாகித்தார். ரஜினியை போல் குழப்பாமல் தைரியமாக கட்சி ஆரம்ப்பித்து இருக்கிறார் என்று கூறும் பத்திரிக்கைகள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். சு.சாமி, பாக்கியராஜ், ராஜேந்தர் போன்றவர்களும் இதை செய்திருக்கிறார்கள். எத்தனையோ சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். உண்மையில் ஒரு அரசியல் தலைவரை பாரட்ட வேண்டுமான்றால் ராமதாசை பாரட்ட வேண்டும். ஜெயலலிதா அராஜக ஆட்சி நடத்திய போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் அவர். உண்மையில் சமுக அக்கறை இருந்தால் விஜயகாந்த் 1996இல் ஜெயலலிதாவிற்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த அளவுக்கு மிக மட்டமான, கொடுங்கோல் ஆட்சி அது. கருணாநிதியை விட மிக மோசமான தலைவராக இருக்க முடியும் என்று ஜெயலலிதா நிருபீத்த காலம் அது. அப்போது ஏன் விஜய காந்த் ஒன்றும் பேசவில்லை. இவர் எதிர்க்கிற ஊழல், லஞ்சம்,வன்முறை, சமுக அநீதி என்று எல்லாமே நிறைந்த ஆட்சி அது.
இறுதி கருத்து.மூன்றாவது அணிகள் தி.மு.க, அ.தி,மு.க இரண்டையும் விட மோசமானவை. எங்கே நிறைய சீட் கிடைக்கும் என்று நினைக்கிற இவர்கள் மக்கள் நலனில் ஒரு போதும் அவர்களை விட கூடுதல் அக்கறை காட்ட போவதில்லை.
கூத்தாடி பயல்கள் தன்னுடைய படங்கள் நன்கு ஒடும் போது அல்லது டாப் 5 ஹீரோவாக இருக்கும் போது மக்களை பற்றி கவலை படுவதில்லை. தான் சினிமா ஃபீல்டிலிருந்து ரிடையர் ஆகும் போது தான் மக்கள் பற்றிய அக்க்றை அவர்களுக்கு வருகிறது.
இவர்கள் இருவரையும் நிராகரிப்போம். மாற்றி மாற்றி இருவருக்கும் வாய்ப்பு கொடுத்து என்னதை கண்டீர்கள் என்று கேட்கும் விஜயகாந்தோ , முன்றாவது அணியோ இவர்களை காட்டிலும் மோசம் என்பது என்னுடைய கருத்து.

Saturday, January 07, 2006

This is a test article to find out if the new template changes made really work.

சாமியார்கள் சமுதாயத்கிற்கு தேவையா?

புனிதமானவர்கள் , வழிகாட்டிகள் என்று கருதப் படுகிற வழிகாட்டிகள்(குருக்கள்) கூட்டம் இப்போது நிறைய வந்து விட்டது. எண்கள் நமது கண்கள் என்றெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்த படுகின்றன. ஆன்மிகம் என்ற பெயரில் நம்மை போலவே உணர்வுகள், சிந்தனைகள் கொண்ட மனிதர்களை தெய்வத்திற்கு இணையாக புகழ்வது, வழிபடுவது போன்ற செயல்கள் இப்போது நிறையவே காண முடிகிறது.

1. சாமியார்கள் கூட்டம் மொத்தத்தையும் கொண்டு போய் மிலிட்டரி செர்விஸ் செய்ய சொல்ல வேண்டும். அல்லது விவசாயம் செய்ய சொல்ல வேண்டும்.

2. அரசியல் வாதிகள் தொண்டர்களை சுய நலனுக்காக அழிப்பதை போல, நடிகர்கள் ரசிகர்களை பயன்படுத்துவதை போல இந்த சாமியார்கள் பக்தர்களை பயன்படுத்துகிறார்கள்.

தனி மனிதனுக்கு இரசிகர்கள் இருப்பது. அவர்கள் சாதனையாளர்களாக பாரட்ட படுவது போன்றவற்றை நான் எதிர்கவில்லை. ஆனால் அவர்கள் தெயவத்திற்கு இணையாக புகழ படுவது மிக அநியாயம்.

குல கல்வி திட்டம்.

ஒட்டு மொத்த சமுதாயத்தையும் அழித்து நாசமாக்கியிருக்கும் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு திராவிட இயக்கங்கள்,சுயமரியாதை இயக்கங்கள் முக்கிய காரணம். துவக்க பட்ட நோக்கத்தில் இருந்து இன்று இந்த இயககங்கள் வெகு தூரம் சென்று விட்டாலும் இம்மாதிரி சமுதாயத்தில் மக்களை அடிமையாகவே வைத்த்ருக்கும் திட்டங்கள் முறியடிக்க பட்டதற்கு திராவிட இயக்கங்கள் மிக முக்கிய காரணங்கள். சுதந்திர நாட்டில் மக்களை இழிவு படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு தமிழகம் திராவிட இயக்கங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். இப்படி இழிவு படுத்த பட வேண்டிய இராசாசி(சீ), இன்றும் போற்ற படுவது வேதனைக்குரியது.

மேலதிகாரிகளிடம் மோதல் வந்தால்.

மிக தைரியமாக மோதி விடுங்கள். வாழ்க்கையில் பஞ்சமே இல்லை. உங்கள் மேலதிகாரிகளுக்கு வேண்டுமானால் வேலை தேடுவது கஷ்டமாக இருக்கலாம். உங்களுக்கு இருக்காது. மேலதிகாரியும் உங்களை போல ஒரு மனிதரே. நீங்கள் திமிராக , நையாண்டியாக பேசினால் அது அவரை கடுமையாக காய படுத்தும். அவரால் கூட உங்களை இந்த அளவு காய படுத்த முடியாது. எந்த ஒரு நிறுவனத்திலும் ஒவ்வொரு நபரும் முக்கியமானவரே.இதை உணராத உங்கள் மேலதிகாரி கண்டிப்பாக வேலை செய்ய லாயக்கில்லாதவரகவே இருப்பார். எனவே திருப்பி அடிக்க உங்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையை சிறப்பாக செய்ய்ங்கள். எப்போதும் உங்களை சீர்படுத்தி கொள்ளுங்கள். அதுவே போதும். மேலதிகாரியிடம் மோதல் வந்தால் தைரியமாக மோதுங்கள்.

Written By Steve waugh.

Friday, January 06, 2006

பாலாஜி புறக்கணிக்க படுகிறாரா?

ஒரளவுக்கு உண்மை. அகர்கர் சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு 46 ரன் கொடுக்கிறார். பாலாஜி 37 ரன் கொடுக்கிறார். அகர்கர் சற்றே சிறந்த பேட்ஸ்மன் என்றாலும் பாலாஜி அவரை விட நல்ல பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை.அகர்கர் ஒரு இடத்தை வீண் செய்கிறார்.

பாகிஸ்தானில் இந்தியா- எனது கணிப்பு.

சென்ற முறை இந்தியா டெஸ்ட் மற்றும் ஒன் -டே தொடர் இரண்டையும் வென்றது. இந்த முறை பாகிஸ்தான் மிக வலிமையாக காட்சி அளிக்கிறது. இந்தியாவும் ஆட்ட திறனை முன்னேற்றியிருக்கிறது. ஆனால் இந்த தொடரில் இந்தியா ப்டு தோல்வி அடையும் என்பது எனது கணிப்பு. பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகளையும் வெல்லும். ஒன் -டே முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையாது. இந்தியா இரண்டிலும் தோல்வி அடையும்.
கணிப்பு தோல்வி அடைந்தால் சந்தோஷமே...

இந்தியா தனது கடைசி 5 போட்டிகளை சாதரணமான டீம்களுக்கு எதிராகவே ஆடியிருக்கிறது. இந்தியா அணி மிக அசாதரணமான வலிமையுடன் காணப் பட்டது எதிரணியின் வலிமையற்ற தன்மையினாலேயே....ஆனால் மாறாக பாகிஸ்தான் வரிசையாக நல்ல அணிகளையே எதிர்த்து ஆடியிருக்கிறது. இதுவே இந்த தொடரினை டிசைட் செய்யும் என்பது என்னுடைய கணிப்பு.



சிறந்த தமிழ் படங்கள்.

1. குருதி புனல்.

2. மகா நதி

3. ரோஜா

4. அஞ்ஞலி.

5. மொளனராகம்.

6. உள்ளத்தை அள்ளி தா

7. கரகாட்டகாரன்.

8.அச்சமில்லை அச்சமில்லை

9.காக்க காக்க

10.பதினாறு வயதினிலே.

உங்களுக்கு பிடித்த தமிழ் படங்களை குறிப்பிடுங்கள்.

ஞானி-தெளிவான கருத்துக்கள்.

ஞானம் பெறுதல் என்றால் அதை தெளிவு பெறுதல் என்றே நான் கருதுகிறேன். எந்த விஷயத்தை பற்றி எழுதினாலும் அதை பற்றி தெளிவாக , கண்ணியமான முறையிலே ஆராய்ந்து எழுதுபவர்களில் ஞானியும் ஒருவர்.
சமுகத்திற்கு தேவையான, அவசியமான, எதிர்கால நலனுக்கு முக்கியமான விஷயங்களை மற்றுமே தேடி கண்டுபிடித்து எழுதுபவர் ஞானி. அவருடைய கண்ணியம் ஒட்டு மொத்த மீடியாவும் கடை பிடிக்க வேண்டிய விஷயம்.
-ஞானி எழுதிய சில கட்டுரைகள் வெப்-இல் இடம் பெற்றுள்ளன. அவற்றுக்கான இணைப்புகள் இங்கே உள்ளன.


http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/sivakumar1.html

http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani6.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani4.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani3.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani2.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani1.html
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/jnani5.html

கேட்க கூடாத கேள்விகள்.

1. ஸ்டாலின் அவர்களிடம்: தாத்தா ஆன பின்பும், இளைஞர் அணி தலைவராக இருக்கலாமா?.
2. காங்கிரஸ் தலைவர்களிடம்: சுதந்திரத்திற்காக போரடிய கட்சி, அன்னியரை தலைவராக வைத்திருக்கலாமா?.
3.குஷ்பு: தமிழக பெண்கள் கற்பு பற்றி கருத்து?
4. அத்வானி: ஜின்னா மத சார்பற்றவரா?
5. கிரண் மோரே: கங்குலியை தேர்ந்தெடுக்க காரணம் பவாரா?
6. வைகோ: உங்களுக்கு எத்தனை சீட் கொடுப்பார் கருணாநிதி?
7.கங்குலி: இன்னோரு சான்சு கிடைச்சா , சாப்பலை ரெகமண்ட் பண்ணுவீங்களா?
8. ஏ.சி.சண்முகம்: மெரினா பீச்சில் இடம் இருக்கே, காலேஜ் கட்டுவிங்களா?
9. கராத்தே தியாகராஜன்: சென்னைக்கு எப்ப வருவீங்க?
10.காஞ்சி பெரியவர்: அம்மா ஆட்சி எப்படி இருக்கு?

போலியன் said...
ரஜினியிடம்:- நீங்க எப்ப அரசியலுக்கு வருவீங்க?
டிஆரிடம்:- இப்ப உங்க கட்சி பேரு என்ன?
சு.சாமியிடம்:- உங்க கட்சியில எத்தனை உறுப்பினர்கள்?
கருணாநிதியிடம்:- ஹிந்தி படிச்சா (மந்திரி)வேலை கிடைக்குமா?
ஜெவிடம்:- மகனை தத்தெடுப்பது பத்தி என்ன நினைக்குறீங்க?
சோவிடம்:- முடி முளைக்க என்ன செய்யலாம்?

டெண்டுல்கரை விரட்டும் பான்டிங்.

தனது 100 வது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து தனது அணிக்கு வெற்றி தேடி தந்திருக்கிறார். ஆஷஸ் தோல்விக்கு பிறகு இருந்த கெட்ட பெயரை குறைக்க இது உதவும். இந்த அளவு ஆட்ட திறனை தொடர்வது மிக கடினம் என்ற பொழுதும், வயது, ரன் குவிக்கும் விதம், மற்ற அணிகளின் பந்து வீச்சாளர்களின் தரம் என்று அனைத்தையும் வைத்து பார்க்கும் போது, சச்சினின் சாதனை முறியடிக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை.
சச்சின் ரசிகர்கள் கோபப் பட்டாலும், அவர் தன்னுடைய ஆட்டகாலத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறார். அவரால் லாராவின் அதிக ரன் சாதனையை நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.

Thursday, January 05, 2006

யாருக்கு தலைவர்கள்.?

எப்போது கூட்டம் நடந்தாலும் சட்டையை கிழிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் இந்த காட்சியை நடத்தியிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் முன்பு. இதை கண்டு ஆவேச பட்ட தலைவர் வாசன், இந்த அடிதடி புகைப்படம் எல்லாம் நாளைக்கு பத்திரிக்கையில் வரும். உங்கள் குடும்பாத்திரடம் காட்டி சந்தோஷபடுங்கள் என்று வெடித்துள்ளார்.
1. தொண்டர்கள் யாருமே இல்லை. யாருக்கு தலைவராக இவர்கள் இந்த சண்டை போடுகிறார்கள்?. ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துர என்று ஒரு படத்தில் விவெக் காமெடி காட்டுவது ஞாபகம் வருகிறது.2. எப்போதும் சட்டையை கிழிப்பதற்கு பதிலாக,கிழிந்த சட்டையை போட்டுக் கோண்டு கூட்டத்திற்கு வரலாமே?. புதிய சட்டையை ஏழை எளிய மக்களுக்காவது கொடுக்கலாம்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டி சண்டைகளை ஒழிக்க வேண்டுமா?. கட்சியை நாலு நாள் ஜெயலலிதா கையில் கொடுக்க வேண்டும்.

Wednesday, January 04, 2006

சிவாஜி கதை என்ன முழு விபரம்: Full Details

சிவாஜி என்ன கதை?
ரஜினியின் பெரும்பாலான படங்களின் கதை இந்த மாதிரியாக தான் அமைந்திருக்கிறது.
1. ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
2. ஒரு ரஜினி ஆன்மிகவாதி.அவர் வாழ்க்கையை விட்டு ஒதுங்குவார். இன்னோரு ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ. அவர் கெட்டவர்களை தண்டிப்பார்.
ஷங்கரின் பெரும்பாலான கதைகள் இந்த மாதிரியாக அமைந்திருக்கின்றன.
1.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார் (ஜென்டில் மேன், இந்தியன்,முதல்வன்)
2.ஹிரோ சாதாரணமானவர். அவர் கெட்டவர்களை தண்டிப்பார். அது அவருக்கே தெரியாது(அன்னியன்)

இப்போது, காமன் மினிமம் ப்ரொகிராம் படி இரண்டு கதை அமைப்புகளுக்கும் பொதுவான கதையை உருவாக்க வேண்டும்.( ரஜினி ,ஷங்கர் ரெண்டு பேரும் கதையை மினிமம் ஆக ஒரு ஃபார்மாலிட்டிக்காக வைத்து படம் எடுப்பவர்கள். இருவரும் இணைவதால் எவ்வளவு கஷ்டம் பாருங்கள்).

ரஜினி ஒரு சூப்பர் ஹீரோ அவர் கெட்டவர்களை தண்டிக்கிறார். ( இது ரஜினி ரசிகர்களுக்காக).இத்தோடு கதையை முடிக்க முடியாது. ஷங்கர் சுஜாதா போன்றவர்கள் புத்திசாலிகளாக காட்டப் பட வேண்டும். எனவே கதையை விரிவு படுத்த வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகியான ரஜினி தன்னுடைய உறவினர்களால் பாதிக்க பட்டு, ஆன்மிக பாதையில் செல்கிறார். அவருடைய பையன் ரஜினி அப்பளம் போட்டு விற்பவர். வில்லன் மக்ள் ஷ்ரேயாவை காதலிக்கும் ரஜினி அவருக்கு பொடுகு இருப்பதை கண்டு பிடித்து அதை குணப் படுத்த அப்பா ரஜினியை அழைக்கிறார். அப்பா ரஜினி ஷ்ரேயாவின் பொடுகுகளை மந்திரம் சொல்லி நீக்கி விட , பையன் ரஜினி , 500 கோடி திருடிய 5 மத்திய மந்திரிகள் ,5 பைசா திருடிய 5 வயசு பையன்கள் 5 பேர் அனைவரையும் ரோட்டில் வைத்து கட்டி போடுகிறார்.
5 வயசுல 5 பைசா திருடறவன் தான் 50 வயசுல 500 கோடி திருடுவான். இவங்க எல்லாத்தையும் சுட்டாதான் நாடு உருப்படும் என்று கூறி அனைவரையும் சுட்டுதள்ளி விடுகிறார்,
இவ்வாறாக ரஜினியை ஒரு சூப்பர் ஹீரோ, ஆன்மிக வாதி, அனைவரையும் தண்டிப்பவராக காட்டி விடலாம். 5 பைசா திருடுபவனை தண்டிப்பதால் படத்திற்கு சங்கர் டச் வந்து விடுகிறது. எல்லாவகை பொடுகளை பற்றி 5 நிமிட டயலாக் போட்டு சுஜாதா தன்னுடைய அறிவியல் மேதாவி தனத்தை காட்டி கொள்ளலாம்.
இன்னும் டெவலப் பண்ணுவேன் கதையை...

உங்களில் ஒருவன்.

உங்களில் ஒருவன்.
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் அப்பா மாதிரி கடிதம் எழுத ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அப்பா அளவுக்கு தலைமை பண்பு, உழைப்பு போன்று எதுவுமே இல்லாவிட்டாலும் , ஸ்டாலின் மேற்கொண்டு தி.மு.க.வில் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரால் கருணாநிதி இல்லாமல் செயல் பட முடியுமா என்பது சந்தேகமே....
தி.மு.க வின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றால் , வைகோவிற்கு அது சாதகமாக முடியும். தி.மு.க. , அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் வோட்டு வங்கிகளை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகின்றன.இரண்டு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியவில்லை.
2006 தேர்தலை பற்றி அனைவரும் ஆவலாக பேசும் போது, என்னுடைய முதற்கட்ட கணிப்பு 2006 திராவிட கட்சிகளின் தனிப்பட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.

Tuesday, January 03, 2006

Management Skills -IIM Guys.

Very often I find that companies run after IIM guys and pay with extra-ordinary amount and bring into the organization with the hope that they would make the organization better. I am not sure if this is the right approach.

What it takes to deliver successfully?
Some say hard work, commitment, focus, initiative. In my opinion , Motivation is the only factor that can make the real difference.

I have seen in places where IIM guys lead and still every thing remains unorganized. But I have seen excellent demonstration of management skills by non-IIM guys. The best example is jothi Narayan one of my bunks party members. ( I leave it to you find an Example for an IIM guy
who is poorly managing his team. You need not search for long. I am sure there would be one in your company as well).

If enough motivation is there then delivery will be successful.That said, this is not to IIM guys are not required. What one company should look at is the motivation level of a candidate and if he is from IIM or not.

Monday, January 02, 2006

பங்க்சு பார்ட்டியும் தமிழக தலைவர்களும்

பங்க்சு பார்ட்டி நண்பர்கள் இந்த வி.ஐ.பி க்களை சந்திக்கிறார்கள். முதலில் ராமதாசு அவர்கள்.
பங்க்சு: ஐயா,வணக்கம், ஓண்ணும் ஓண்ணும் ரெண்டுல உங்கள பத்தி எழுதினேன். படிச்சிங்களா?.
ராமதாசு: எந்த பத்திரிக்கையையும் நம்பி நான் இல்ல. (தொண்டர்களை பார்த்து) இனிமே,இந்த பத்திரிக்கை படிக்காதிங்க...
பங்க்சு: தலைவர்கள் எல்லாம் தொண்டர்களுக்கு நல்லது செய்வாங்க. ஆனா நம்மூர்ல மட்டும் தான் இதை படிக்காத , அதை படிக்காத அப்படின்னு அறிவுரை(?) சொல்றிங்களே ஏன்?
ராமதாசு: எல்லாரும் படிச்சுட்டா, என் பேரன், பேத்தி எல்லாம் மத்திய மந்திரி ஆக முடியாது.
பங்க்சு: ஐயா சூப்பருங்க!!, உங்களுக்கு இருக்கிற விஷனே தனி. ஏன் ஐயா சினிமா காரங்களை தாக்குறீங்க?
ராமதாசு: நாளைக்கு தேவப்படும்போது கலாட்ட பண்ண தெரியனும். அதுக்கான ட்ரைனிங் தான் இந்த ஸ்டண்ட்.
பங்க்சு: அப்படின்னா மக்கள் நலனுக்கு 2006 ல எதுவும் திட்டம் உண்டா?
ராமதாசு: இந்த தடவை தி.மு.க, அ.தி.மு.க ரெண்டு பேரோடையும் கூட்டணி வைக்கலாம்னு இருக்கேன். இங்க ஒரு 30, அங்க ஒரு 30, யாரு ஜெயித்தாலும் 6 மந்திரி பதவி. இது தான் ரேட்.
பங்க்சு: சூப்பர்யா, உங்களுக்கு எதிர்காலம் பிரமாதம்.

அடுத்து ஜெயலலிதா,


பங்க்சு: அம்மா, உதவிதொகை அளிக்கிறேன்னு ஒரு 50 பேரை போட்டு தள்ளிடிங்களே?
ஜெயலலிதா:உதவிதொகை கொடுத்து நான் பேர் வாங்கிருவேன்னு, கருணாநிதி 50 பொணத்தை கொண்டு வந்து போட்டுடார். ஜெயா TV பார்த்தா உண்மை தெரியும்.
பங்க்சு:பொறுப்பான பதில். அடுத்து என்ன இலவச திட்டம் வைச்சுருக்கிங்க?ஜெயலலிதா: மக்கள் இனிமே எந்த கடையிலும்போய் எதை வேணும்னாலும் எடுத்துக்கலாம்னு ஒரு திட்டம் வருகிறது.
பங்க்சு: நன்றிம்மா, நன்றி


அடுத்த படியாக கருணாநிதி.
பங்க்சு: ஐயா வணக்கம்.கருணாநிதி: பேரன்பு மிக்க உடன்பிறப்பே, இப்படி வெறுங்கையோடு வந்திருக்கிறாயா?

பங்க்சு: ஐயா புத்தாண்டு வாழ்த்துக்களோடு தான் வந்திருக்கிறேன்.

கருணாநிதி: அது யாருக்கு வேணும்? எனக்கு நிதி தான் வேணும்.

பங்க்சு: ஐயா, புத்தகம், முரசொலி,சினிமா கதை வசனம் எழுதி தமிழனை கொல்றது மட்டுமில்லாமல்,பில் கேட்சுக்கும் புத்தகம் கொடுத்திட்டங்களே,
கருணாநிதி: ஆமாம். விக்காத ரெண்டு புக்க அவருக்கு கொடுத்தேன். காசு நிறைய கொடுப்பார்னு பார்த்தேன். பெரிய பணக்காரர்னு சொன்னாங்க... ஆனா அவரு ஒண்ணும் கொடுக்காம போயிட்டார்.பில் கேட்சு சந்திப்பு பற்றி புத்தகம் எழுதி காசு பாக்கணும்
பங்க்சு: ஐயா, எனக்கு ஏதாவது அன்பளிப்பு உண்டா?

கருணாநிதி: என்னுடைய நெஞ்சத்தில் இடம் கொடுக்கிறேன்.
அடுத்த படியாக வைகோ.பங்க்சு:வைகோ அவர்களே வணக்கம்.
வைகோ: பொறுதடக்கை வாளெங்கே, மணிமார்பெங்கே,பறுவயிரத்தோளெங்கே என்று கேட்டவளை கலிங்கத்து பரணியில் பார்த்திருப்பீர்கள். அத்தகைய தோள்களை நான் பங்க்சு பார்ட்டி நண்பர்களிடம் காண்கிறேன்.
பங்க்சு: கலைஞர பார்த்தாலே கட்டி பிடிச்சு அழுகிறிங்களே ஏன்?
வைகோ: எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு தேர்தல் வரும் போது மட்டும் தான் பிரியும். மற்ற எப்பவும் மாறாதது.
பங்க்சு: இலஙகை தமிழனுக்குன்னு மீண்டும் குரல் கொடுக்கிறீர்களே, தமிழக தமிழன் ஏன் மறந்து விட்டீர்கள்.
வைகோ: இலஙகை தமிழன் காசு கொடுக்கிறான். நம்மூர் தமிழனுக்கு குரல் கொடுத்தா பிரயோஜனம் இல்லை.
பங்க்சு: சூப்பர் வைகோ அவர்களே