Friday, May 18, 2007

சென்னைக்கு குடியேறுகிறேன்.

1995 - முதல் 1998 வரை சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் படித்த பின்னர், பெங்களுர் வந்து விட்டேன். கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் சென்னையில் குடியேறுகிறேன். பெற்றோர்களுடன் இனிமேல் நிறைய நேரம் இருக்க முடியும். அது மட்டும் இல்லாமல் பதிவுகளும் இனிமேல் நிறைய எழுத முடியும்.

வாழ்க்கையில் நமக்காக எவ்வளவோ செய்த பெற்றோர்களுக்கு, நாம் என்ன திருப்பி செய்கிறோம் என்பது ஒவ்வொருவரும் எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று. நானே மிக தாமதமாக முடிவெடுத்தாகவே கருதுகிறேன். வாழ்க்கையில் எதிர்காலத்தை பற்றி நிறையவே ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். பணம் , வேலை, சொத்து சேர்ப்பது மட்டுமில்லாமல், பெற்றோர்களை பற்றியும் ஒவ்வொருவரும் திட்டமிட வேண்டும்.

1 comment:

முத்துகுமரன் said...

வாழ்த்துகள் பாலசந்தார். நீண்ண்ட நாஅட்காளாகிவிட்டது உங்கள் பதிவுகளை பார்த்து. அநேஎகாமாக நீங்கள் திரட்டிகளில் இணைந்துகொள்ளாவில்லை என நினைக்க்கிறேன். சென்னை வாழ்க்கை இனிதாய் அமைய்யட்டும்