Sunday, December 18, 2005

என்ன மாறி என்ன?

பவார் டால்மியாவை தோற்கடித்து விட்டார். இனிமேல் வெட்டி அரசியல் இருக்காது என்று எதிர்பாத்தேன். ஆனால் அனைத்து எதிர்பார்ப்பும் உடனடியாக பொய் ஆகிவிட்டாது.முன்பு கொல்கட்டா க்ரூப் டாமினேட் செய்தது . இனிமேல் மும்பாய் க்ரூப் இந்த வேலயை செய்யும்.
ஒரள்வு நன்கே ஆடிய சவுரவ் நீக்கம் செய்யப் பட்டார். அஜித் அகர்கர் தொடருகிறார். வாசிம் ஜாபருக்கு மீண்டும் வாய்ப்பு. விட்டால் வினோத் காம்ப்ளி வருவார் போலிருக்கிறது. பாலாஜி , சடகோபன் ரமேஷ் போன்றவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.
ஒரு முன்னாள் கேப்டன் திட்டமிட்டு அவமான படுத்த படுகிறார். ஆயிரம் குறை கூறினாலும், இன்றைய டீமின் முக்கிய வீரர்கள் அனைவரையும் உருவாக்கியவர் அவரே. சேவாக், பதான்,ஜகீர்கான், கைஃப், யுவராஜ் என்று ஒரு புதிய அணியை உருவாக்கிய பங்கு அவருக்கு உண்டு. சித்து, மஞ்ரேகர், அசார், ராபின் சிங், ஜடேஜா என்ற முந்தைய அணியை விட இப்போதைய அணி எவ்வளவோ வலிமை மிக்கது என்பதில் சந்தேகமில்லை.
நடக்கின்ற காரியங்கள் யாவும் இந்திய கிரிக்கெட் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை உருவாக்கவில்லை.

No comments: