Saturday, August 12, 2006

பின்னூட்டங்களை பிரசுரம் செய்வது...

சிவஞானம் என்ற சகபதிவருக்கு கேள்விகள் என்று பல கேள்விகள் எனது பதிவிற்கு பின்னூட்டமாக வந்திருக்கிறது. இன்னமும் பல பதிவர்களுக்கு இந்த பின்னூட்டங்கள் இடபட்டுள்ளன. எல்லாருக்கும் அனுப்பினால் யாராவது ஒன்றிரண்டு பேராவது பதிவு செய்வார்கள் என்ற எண்ணத்தோடு தான் இந்த பின்னூட்டங்கள் இட பட்டுள்ளன. அது போலவே இந்த பின்னூட்டம் வெளி இட பட்டுள்ளது. சில வரிகள் எடிட் செய்யபட்டுள்ளன.

உண்மையில் ஒர் பதிவருக்கு கேள்விகள் அனுப்பட வேண்டுமானால், அதை அவர் பதிவில் பின்னூட்டமாக இடுங்கள். அல்லது உங்கள் வலைப்பூவில் இன்னாருக்கு கேள்விகள் என்று பதிவாக இடுங்கள். அதை விட்டு விட்டு சகட்டுமேனிக்கு எல்லா பதிவுகளிலும் பின்னூட்டம் இடுவது என்பது சரியான முறையன்று.இதை ஊக்குவிக்காதீர்கள் என்று சகபதிவர்களை வேண்டி கொள்கிறேன். எந்த பின்னூட்டம் வெளி இட படவேண்டும் என்பது உங்களுடைய தனிபட்ட சுதந்திரமே. உங்கள் சுதந்திரத்தை இன்னொருவர் முறைகேடாக பயன்படுத்த விடலாமா?

No comments: