Monday, November 07, 2005

என்ன ஆச்சு ஆயிரம் கோடி?

கடல் நீரை குடி நீரா மாத்துர திட்டம்னு ஒண்ணு போட்டாங்க... நம்மாளு கணக்குப்பிள்ளை சிதம்பரம் ஆயிரம் கோடி அறிவிச்சாரு.... கலைஞரும் அறிக்கை விட்டாரு நான் தான் காரணமுன்னு.. எங்கய்யா வந்துச்சு காசு?...

அம்மா ஆட்சி நடக்கிற வரைக்கும் ஸ்டேட் கவர்மெண்ட் திட்டத்துக்கு எல்லாம் காசு கொடுக்க வேணாம்னு தமிழர் தலைவர் சொல்லிட்டார்.
அதுனாலதான் சேது சமுத்திர திட்டம் மட்டும் தொடங்கிருச்சு. மத்த திட்டமெல்லாம் சும்மா கிடக்கு..இப்படியா தமிழனுக்கு நல்லது பண்ணாறாரு மஞ்ச துண்டு..

ஊரெல்லாம் மழையில முங்க சன் டீவிகு பயங்கர சந்தோஷம்.. இது தான் சாக்குண்ணு எல்லாத்தையும் வீடியொ எடுத்துட்டு அம்மா ஆட்சியில எல்லாம் முங்கிருச்சுண்ணு பில்ம் காட்டுது.இன்னும் கொஞ்சம் நாசம போயிருந்தா , இன்னும் நல்லா அம்மா ஆட்சிய திட்டலாமுன்னு இன்னும் கொஞ்சம் பெய்யாதன்னு பாத்திட்டு இருக்காங்க போல...


இந்த நல்ல ம்னுஷங்க பண்ணுரது போதாதுண்ணு தன் பங்குக்கு சேது சமுத்திர திட்டத்துக்கு என்வ்ரிரான்மெண்ட் க்ளியரென்ஸ் நிறுத்தி வைச்சிருக்கு பச்ச சேலை..


இப்படி ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு தமிழனுக்கு நல்லது பண்றாங்க..


இவ்வளவுக்கும் நடுவில தமிழன் கோகிலா எங்க போறான்னு பாத்துகிட்டு இருக்கான் ரொம்ப பொறுமையா.

No comments: