Thursday, November 10, 2005

அன்னியன் - கலைஞர்.....

கலைஞர் பிரிச்சிட்டாரு சொத்தை. அதற்கு ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வேறு. புதியதாக ஒரு அறக்கட்டளை வேறு. தலைக்கு கொறஞ்சது 5 கோடி கொடுக்கப் பட்டதாக தகவல்.உண்மையிலே பாரட்டப் பட வேண்டிய தலைவர்களில் கலைஞரும் ஒருவர். தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் தோல்வி அடைந்த போதும் கட்சியை எஃகு கோட்டையாக கட்டிகாத்த மன வலிமை மிக்க சிங்கம் கருணாநிதி. இப்ப மொத்தமா கட்சியை பையன், பேரன் கையில் கொடுக்க தயாராகி விட்டாலும், அவர்கள் இருவருமே தனித்துவம் இல்லாதவர்கள் என்பதும், தொண்டர்களால் பெரிதும் மதிக்கப் படாதவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.
அன்னியன் படத்தில் ஒரு டயலாக் வரும். அஞ்சு பைசா திருடினா தப்பா?... அப்படின்னு.. சினிமாவுக்கும் நிஜத்துக்கும் இது தான் வித்தியாசம்.

2 comments:

டிபிஆர்.ஜோசப் said...

உங்க கடைசி கமெண்ட்டின் அர்த்தம்தான் புரியல!

அதாவது கலைஞர் கொள்ளையடித்த சொத்திலிருந்து அறக்கட்டளை வைக்கிறார் என்று சொல்கிறீர்களா?

பாலசந்தர் கணேசன். said...

இல்லை என்று சொல்ல மாட்டேன்.