Sunday, November 20, 2005

சொன்னாலும் சொல்வார்கள்......

இந்தியன் எக்ஸ்ப்ரஸ், ஹிந்து பத்திரிக்கைகள் தமிழில் வெளியிட பட வேண்டும். தமிழன் செய்தியை தமிழில் சொன்னால் படிக்க மாட்டானா?.(ராமதாசு).


அம்மாவின் உயர்ந்த குணத்தினால் தான் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து நன்றாக ஆட முடிகிறது.(பொன்னையன்).


சென்னை நகர் தண்ணிரீல் மூழ்கி சீரழிவதை தடுக்கும் யோசனைகளை நிபுணர்களுடன் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் சென்னை திரும்புவேன்.(கராத்தே தியாகராஜன்).


நான் குஷ்புவை தான் ஆதரித்தேன். குஷ்புவின் கருத்தையல்ல. தமிழர்களின் கருத்தை தான் எதிர்த்தேன் தமிழர்களை அல்ல.(சுகாசினி).


நூறு கோடி மக்களையும் சோதித்து பார்த்து அதிலிருந்து சிறந்த வீரர்களை கொண்டு 2007 உலக கோப்பை அணியை உருவாக்க வேண்டும்.(சாப்பல்)


மழை நிறைய பெய்ததால் மட்டும் ஊர் நிறையவில்லை. மக்கள் கண்ணீரினால் நிறைந்திருக்கிறது என்பதை இந்த அரசு அறியுமா.(கருணாநிதி).

2 comments:

G.Ragavan said...

சூப்பரப்பு....நல்லா இருந்திச்சி....

MKVANMADHI said...

very nice