Saturday, November 12, 2005

பிடிச்சுட்டாங்க....

எல்லாரும் இப்ப பேப்பர்ல பாத்திருப்பிங்க அபு அலீம் மற்றும் மோனிகா ரெண்டு பேரையும் இந்தியாவுக்கு அரஸ்ட் பண்ணி கொண்டு வந்துருக்காங்க..
இதுல புரியாத ஒண்ணு என்னன்னா வேற வழியில்லாததுனால விசாரணை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே மரண தண்டனை கிடையாதுங்குற உறுதி மொழிய கொடுக்க வேண்டியிருக்கு. இப்ப ஒரு போர்ச்சுகல் குடிமகன் இந்தியாவுக்கு குண்டு போட்டு மாட்டுகிட்டா மரண தண்டனை கிடைக்கலாம். அவன காப்பாத்த போர்ச்சுகல் நாடால முடியாது. ஆனா அபு சலீம் மாதிரி இந்திய குடிமகன் குண்டு போட்டுட்டு இந்தியாவில் இருந்து போர்ச்சுகல் ஒடிட்டா அவன போர்ச்சுகல் நாடு மனித உரிமைய காரணம் காட்டி காப்பாத்திரும். செத்து போன அப்பாவி மக்களுக்கெல்லாம் மனித உரிமை கிடையாதா? இந்தியாவில இந்தியன் பண்ண குற்றத்துக்கு என்ன தண்டனை அப்படின்னு நிபந்தனை விதிக்க போர்சுகலுக்கு உரிமை உண்டா?. இந்த மாதிரி நிபந்தனையினால போர்சுகல் தன்ன ஒரு மனித உரிமை டுங்கியா காட்டிக்க பயன் படுமே தவிர ஒரு பிரயோஜனமும் கிடையாது.