Thursday, November 17, 2005

எதற்கும் அஞ்சாத சிங்கம் மா பெரும் மேதை சோ ராமசாமி.

ஜோதி வழக்கம் போல ஒரு சூடான மெயில தட்டி விட்டார். இந்த ப்லாகில் நான் மட்டுமில்லை, சிவாமற்றும் பல நண்பர்கள் எழுதுகிறார்கள். இந்த ஆர்டிகிள் ஜோதிக்காக சமர்ப்பணம் செய்யப் படுகிறது.

எல்லா விஷயத்திலும் நன்கு அறிவு பூர்வமாக செயல்படும் ,வாதம் புரியும் சிலர், சோ ராமசாமி விஷயத்தில் மிக பெரிய தவறுகள் செய்கிறார்கள். இந்த அளவுக்கு சமூக பொறுப்புணர்ச்சி உள்ள பத்திரிக்கையாளர் இந்த நாட்டில் மிக குறைவு. கோயங்கா, சோ போன்றவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய பங்கு மிக பெரிது. ஜனநாயத்தின் மிக பெரிய தூண் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டு சமுதாயத்தை மேலும் சீரழிக்கும் மீடியா உலகில் சோ போன்றவர்கள் கொள்கை உணர்ச்சியோடு சீரிய முறையில் நடத்தி வருகிறார்கள்.
ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் அறிவு பூர்வமாக இருக்க வேண்டும் என்றொ, அல்லது மக்கள் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை. ஜன நாயகத்தின் ஒரு பெரிய குறை பாடுகளில் இதும் ஓன்று.

காரணம் எதுவும் இன்றி எதிர்ப்பது தவறு.(காரணம் இன்றி ஆதரிப்பதும் தவறு.) என்னுடைய ஆதரவுக்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். எதிர்ப்பவர்களால் ஆணித் தரமாக விமர்சிக்க முடிந்தால்(முடியுமா?), அதை ஏற்றுக் கொள்ள நான் தயாரகவே இருக்கிறேன்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

சோ அவர்களை பற்றி நான் போட்ட இப்பதிவைப் பாருங்கள். முக்கியமாக அப்பதிவுக்கு வந்தப் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

சோவை எதிர்த்தவர்கள் கூட அவர் கண்ணியமான முறையில் பத்திரிகை நடத்துகின்றார் என்பதை மறுக்க இயலவில்லை. ஆனால் அதையே ஒரு குறையாக திரித்தவர்களும் உண்டு. பலரது மூளைகள் எப்படியெல்லாம் வேலை செய்னின்றன என்பதை பார்ப்பதிலுன் சுவாரசியம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

hehe

ஜோ/Joe said...

கண்ணியமாக நடப்பதால் கோமாளிகள் மேதைகளாகி விட முடியாது