Thursday, November 24, 2005

ஒரு வேளை வாயை மூடியிருந்தால்...

ரொம்ப சிரமத்திற்கு இடையே, டெஸ்ட் அணியில் மட்டும் கங்குலிக்கு இடம் கிடைத்திருக்கிறது.உண்மையிலேயே, கங்குலி டெஸ்டை விட நன்றாக ஒன்டே மாட்சுகளில் ஆடுபவர். அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அவருக்கு ஒன்டே அணியில் இடம் கிடைத்திருக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால், இரண்டு அணியிலும் கிடைத்திருக்க கூடாது.
இந்த அளவுக்கு நிலைமை மோசமாக போனதற்கு கங்குலி மிக முக்கிய காரணம். ஒரு வேளை ஜிம்பாப்வேயில் அவர் வாயை மூடியிருந்தால், இன்னமும் கூட அவர் பதவியில் நீடித்திருந்திருக்கலாம்.அவர் இடம், பதவி இரண்டையும் இழந்ததற்கு இந்த பிரச்சினையே காரணம். (மோசமான ஆட்டம் காரணம் என்றால் அவர் எப்பொழுதோ இவற்றை இழந்திருக்க வேண்டும்.) தேவையே இல்லாமல் பிரச்சினையை கிளறி விட்டு , இப்போது அவஸ்தை படுகிறார்.

No comments: