Saturday, November 19, 2005

தைரியமா சிந்திக்க வேண்டும்.

குஷ்பு மேல 25 கேசு. சுகாசினி மேல இப்ப புதுசா ஒரு கேசு. விஜய்,ரத்னம்,அசின்(?) மேல கேசு.நாட்டுல ஏற்கனவே இருக்குற கேசு பத்தாதுண்ணு புதுசா இத்தனை கேசு, ஜனநாயக நாட்டில இளிச்சவாயனைத்தான் எல்லாரும் விரட்டுவாங்க என்பதற்கு இது எல்லாம் எடுத்துக் காட்டு.

இதே கருத்தை கருணாநிதி , ஜெயலலிதா சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க.. எல்லாரும் வாயை மூடிக்கிட்டு சும்மா இருந்திருப்பாங்க... கூத்தாடி பயல்கள கோயில் கட்டி கொண்டாடுவதும் தப்பு. இந்த மாதிரி ஊரே ஒண்ணா சேந்து அடிக்கிறதும் தப்பு.
உங்க ஊருக்கு எந்த நல்லதும் பண்ணாத சட்ட மன்ற உறுப்பினரையோ. நாடளு மன்ற உறுப்பினரையோ கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா? எவ்வளவோ நல்லது செஞ்ச உறுப்பினர் செழியனை விட்டுட்டு ஒரு கூத்தாடி பொம்பளைய (வைஜயந்திமாலா) அனுப்பிச்ச ஊர் தான் இது.மண்டையில் மூளை இல்லாத தமிழனை இந்த ஜென்மத்துக்கும் மாத்த முடியாது... இனிமேயாவது தமிழன் தைரியமா சிந்திக்க கத்துக்க வேண்டும்.

1 comment:

பாலசந்தர் கணேசன். said...

பாலா,

தாங்கள் திரு விஜய் கேஸ் பற்றி குறிப்பிட்டதை கடுமையாக எதிர்க்கிறேன். "வெடி"காசி படம் ஒட வேன்டும் என்ற "நல்ல" எண்ணத்தோடு அவிங்க அப்பா காசு போட்டு கேசு போட்டிருக்காரு! அதனால் "அப்பா"வியான விஜ்ய்யை சபை குருப்பிலிருந்து நீக்குக!!!