Sunday, March 05, 2006

கங்குலியை மீண்டும் அவமானபடுத்துகிறார்கள்.

சமீபத்தில் சாப்பல் கொடுத்த ஒரு பேட்டியில் கங்குலியை மீண்டும் குறை கூறியிருந்தார். இந்த முறை ஆட்டத்தில் உள்ள் குறைபாடுகள் மட்டுமின்றி, கங்குலியை தனிப்பட்ட முறையிலும் மிக அநாகரிகமான முறையில் விமர்சித்துள்ளார் சாப்பல்.

சாப்பல் பல விஷயங்களில் செயல்படுகின்ற விஷயங்கள் அளவு மீறி செயல்படுவதாகவே உள்ளன. உண்மையில் கிரிக்கெட்டில் வீரர்களின் திறன், கேப்டனின் புத்திசாலித்தனம் தாண்டி பயிற்சியாளர் எதையும் பெரிதாக சாதிக்க முடியும் என்று நான் கருதவில்லை.

இது என்னுடைய கருத்து மட்டுமில்லை. சாப்பலில் சகோதரரும் கூட இதே கருத்தையே தெரிவித்துள்ளார். சாப்பலின் சகோதரர் சொல்லி இருக்கும் கருத்தை பாருங்கள்: வீரர்கள் சொந்தமாகவே வெற்றி அடைவதற்கான வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். அத்தகைய அணிகள் மட்டுமே
மிக சிறப்பாக ஆடமுடியும்.

எனது கருத்தும் அதுவே. சர்வதேச அளவில் வீரர்களின் ஆட்டதிறன், கேப்டனின் சமயோசித புத்தி மட்டுமே அணியின் தரத்தினை நிர்ணயிக்கும்.

No comments: