http://bunksparty.blogspot.com/2006/03/blog-post_21.html
அந்த பதிவிற்கு மூல காரணம் தீண்டாமை இன்னமும் தொடர்கிறது. இதனால் தலித் மக்கள் இன்னமும் பல இடங்களில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு துன்பம் அனுபவிக்கிறார்கள். இந்த செய்தி(கொடுமையை) பாருங்கள்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு. வெறும் பேச்சுவார்த்தை என்று வெட்டியாக நாள் கடத்த கூடாது. அதனால் என்ன பயனுன் வரபோவதில்லை. எனவே கடுமையான நடவடிக்கை மட்டுமே பலன் தரும். பிள்ளைகள் வகுப்புக்கு வராவிட்டால் அவர்களை நீக்கம் செய்ய வேண்டும். இந்த வயதிலியே அவர்கள் சாதி வெறியை ஊட்டும் பெற்றோர்களுக்கு அதுவே ஒரு சரியான பாடமாக அமையும். அந்த பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் பணி நீக்கம் செய்ய படவேண்டும். அதை விட்டு விட்டு, வெறுமே பேச்சு வார்த்தை நடத்தினால் இந்த கொடுமைகள் வேறு யாருக்காவது நடந்தே தீரும். மகேஸ்வரியினை இடம் மாற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
No comments:
Post a Comment