Thursday, February 02, 2006

கூட படிக்கிற பொண்ணு வீட்டுக்கு போறது தப்பா?
காலேஜில படிக்கும் போது கூட படிக்கிற பொண்ணு வீட்டுக்கு போயிருக்கிங்களா?. இது எனக்கு ஒரு தனி பிரச்சினையாவே தெரிஞ்சதில்லை. ஏனெனில் என் கூட படிக்கிற பொண்ணுங்க நிறைய பேர், அவங்க குடும்பம் எல்லாருமே எனக்கு முன்னரே அறிமுகமானவர்கள். எனது குடும்பத்தாருக்கும் தெரிந்தவர்கள்.
முதல் முதலாக பிரச்சினை ஆரம்பித்தது, என்னோடு படித்த சில பேர், என்னை போல அவர்கள் வீட்டுக்கு சென்றனர். அடிக்கடி சென்றனர். இது ஏனோ சில பேர் வீட்டிலே தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியது. இதனால் சில பெண்கள் என்னிடம் சங்கட பட்டனர். இதை அவர்களிடம் எப்படி கூறுவது என்று அவர்களுக்கும் தெரியவைல்லை. எனக்கும் தெரியவில்லை. நீ மட்டும் போற என்று கேட்டால் என்ன பதில் சொல்ல என்று எனக்கும் தெரியவில்லை. எனவே நான் போவதை நிறுத்தி விட்டேன்.
என்னதான் இப்போது கூட பல கல்லூரிகளில் ஆண் பெண் சகஜமாக பழகினாலும் தற்போது கூட பசங்க பொண்ணுக வீட்டுக்கு போக முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.

5 comments:

மகேஸ் said...

இப்ப என்ன சொல்ல வர்ரீங்க? :-)

பாலசந்தர் கணேசன். said...

ஸ்மார்ட்டா இருக்கிற மகேஸ் அவர்களே!!!

பொண்ணுங்க வீட்டுக்கு போற ஆட்க, எச்சரிக்கையா இருக்கணும். அந்த பக்கம் என்ன ரியாக்ஷன் இருக்குன்னு தெரியாம... அங்க போகாதிங்க.

அலேக்

நிலா said...

மாத பத்திரிகைங்கறீங்க, இன்னும் கொஞ்சம் ஆழமா எழுதலாமே?

பாலசந்தர் கணேசன். said...

நிலா அவர்களே,
வருகை தந்தமைக்கு நன்றி. இது பொழுதுபோக்கிற்காக ஆரம்பிக்க பட்ட பத்திரிக்கை. இப்பவும் அதுவே. ஆழம், அளவு கம்மியாக இருப்பது பற்றி கடற்புரத்தான் ஜோ போன்றவர்கள் விமர்சித்தார் உங்களை போலவே ஒழுங்கான முறையில். அப்பாவி ஆறுமுகம் கிண்டலடித்தார் நகைச்சுவையான முறையில் . ஜிகிடி சாணியடித்தார். நான் அந்த பின்னூட்டத்தையும் இங்கே குறிப்பிட்டேன்.

என்னுடைய பதில் , ஒரு கருத்தை மையமாக வைத்து பதிவு எழுத படிகிறது. இன்னமும் முழுமையாக கொண்டுவர முயற்சி செய்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி

மகேஸ் said...

// ஸ்மார்ட்டா இருக்கிற மகேஸ் அவர்களே!!!//
நன்றி பாலச்சந்தர்.
பசங்களின் கவனத்தைத் திருப்பி, நம்ம வளையத்துக்கிள்ளே கொண்டு வர்ரதுலதான் திறமையே இருக்கு தலைவா.