Monday, February 20, 2006

சித்திரம் பேசுதடி.

எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத ஒரு திரைப்படம் மிக கடுமையாக நம் உணர்வுகளை தாக்குகிறது. ரவுடியை காதலிக்கும் பெண் என்று எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அந்த வரிசையில் இந்த படத்தை நிச்சயமாக சேர்க்க முடியாது.
சாதரணமாக திரை படங்கள் என்னை உணர்வு பூர்வமாக பாதிக்காது. வெறும் கற்பனை பிம்பங்களை அளவுக்கு மீறுவது சரியானதாக படவில்லை. ஆனால் இந்த படம் சுய கட்டுபாட்டுகளை தாண்டி என்னை பாதித்தது. இவ்வாறு சொல்வது எனக்கு விருப்பமானதாக படவில்லை என்றாலும் படத்தின் சில நொடிகளே வருகிற காட்சியின் வீரியம் இன்னமும் என்னிடத்தில் உள்ளது.
விபச்சார விடுதியில் காதலன் காதலியின் கண் முன்னர் கைது செய்ய படுகிறான்.கல்யாணம் நின்று விடுகிறது. பெண்ணின் தகப்பனார் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் பிரிந்து செல்லும் காதலி இறுதியில் காதலனை மீண்டும் சேர்கிறார். ஏன்?. சித்திரம் பேசுதடி படம் பாருங்கள்....

2 comments:

krishjapan said...

yes, beyond expectation! very nice movie indeed.

b said...

இன்னும் இந்தப்படம் பார்க்கவில்லை நண்பரே. பார்க்க முயற்சி செய்கிறேன்.