Monday, February 06, 2006

எத்தனை ரன் அடிச்சாலும் கொடுத்துவிடும் பௌலர்கள்.

இந்தியாவின் தோல்விக்கான காரணம் கண்டுபிடிப்பது மிக எளிது. 45 வது ஒவருக்கு அப்புறம் இந்தியாவின் ஆட்டம் சரியான சொதப்பல்.இந்தியா பதான்,தோனியை ட்ராவிட்,யுவராஜ்,கைஃபை விட நம்புகிறது. அவர்களும் அதற்கேற்றார் போல ஆடுகிறார்கள். டெண்டுல்கர் ஒரு நிதானமான, பாரட்டதக்க ஆட்டம் ஆடினார்.

ஃபீல்டிங் நன்றாக முன்னேறியும் கூட இந்தியாவினால் ரன்களை கட்டுபடுத்த முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது. யுவ்ராஜ் மற்றும் சேவாக் போன்றவர்களை இன்னமும் அதிகமாகவே பயன்படுத்தலாம். ஒவ்வோர் போட்டியிலும் 2 ஒவர் கொடுப்பதனால் அவர்களும் எதுவும் சாதிக்க போவதில்லை.

பதான் ஒரேடியாக பத்து ஒவர்களையும் வீசியது சற்று அதிகபடியாக தோன்றியது. மத்த பந்து வீச்சாளர்கள் ரொம்ப பின்னரே வந்தனர். அவர்களாலும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.
டாஸ் ஜெயித்த உடன் இந்தியாவை பேட் செய்ய அழைத்தன் மூலம் பாகிஸ்தானின் திட்டம் தெளிவாகிறது. இந்தியா எத்தனை ரன் அடித்தாலும் அத்தனையும் இந்திய பந்து வீச்சாளர்கள் கொடுத்து விடுவார்கள் என்கிற அவர்கள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சரியாகவே அமைந்தது.

என்றாலும் இன்னமும் மூன்று ஒவர்கள் இருக்கையில் போட்டி நிறுத்த பட்டது இந்தியாவிற்கு மிக பெரிய அநியாயமே. ஒரு நாள் போட்டிகளில் இதை காட்டிலும் பெரிய கூத்துகள் விதிமுறை காரணமாக நடந்துள்ளது.

45 ஒவரில் 305 க்கு 5 விக்கெட்கள் இழந்த இந்தியா இறுதியில் 328 க்கு ஆல்-அவுட் ஆனது. அது போல பாகிஸ்தானுக்கும் கூட நடந்திருக்கலாம் அந்த மூன்று ஒவர்கள் தொடர்ந்திருந்தால். என்ன பேசி என்ன?

1 comment:

பாலசந்தர் கணேசன். said...

ஆமாம் எதிர்காலம்தான் எப்பவும் நம்பிக்கை. ஜப்பானியர்கள் "When Everything seems to be lost, Future Remains" என்று அழகாக கூறியுள்ளனர்.