Monday, February 27, 2006

மக்களே ஒட்ட பார்த்து போடுங்க

மக்களே ஒட்ட பார்த்து போடுங்க
ஒட்டை இந்த கட்சிக்கு தான் போடுவேன் என்று கட்சிக்கு விசுவாசமாக மக்கள் இருப்பது தான் பிரச்சினைகளின் மூலகாரணம். கட்சிக்கு இவர்கள் காட்டும் விசுவாசத்தை, தங்கள் தெருவின் மீதோ ,ஊரின் மீதோ காட்டினால் இவர்கள் இருக்கும் இடமாவது மேம்படும். யாரை நிப்பாட்டினாலும் மாறாமல் ஒட்டு போடுவது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக அமைகிறது. நமது மாநிலத்திற்கு மிக அருகே உள்ள கேரளாவை பாருங்கள். அங்கே அரசியல்வாதிகள், நடிகர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். நம்மூரில் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம். காரணம் தமிழனிடம் இருக்கும் தனிமனித வழிபாடு. இந்த அடிமை புத்தி தான் தலைவர்களின் நிரந்தர சொத்து.
உடன்பிறப்பே, கழக கண்மணியே, இரத்தத்தின் இரத்தமே இனியாவது உனது சொந்த பெயரில் ஒரு அடையாளம் தேடு. கட்சி விசுவாசத்தை விடு. உனக்கு நல்லது எது என்று தேடு.

No comments: