Thursday, February 09, 2006

பெற்ற சுதந்திரம் பறி போகிறதோ

பதவியில் இருந்தவரை மணிசங்கர அய்யர் ஒரளவு சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். பெட்ரோல் விலை உயர்வு பற்றி அவர் அடித்த கமெண்ட் மோசமானது என்றாலும் அவருடைய பல்வேறு திட்டங்கள் லாங் டெர்மில் இந்தியாவிற்கு முகுந்த பலனை அளிக்க கூடியவை.
மத்திய மந்திரிகளின் இலாகாக்களை மாற்றி அமைக்க மன்மோகன் சிங்கிற்கு அதிகாரம் இருக்கிறது என்ற போதிலும் நன்கு செயல்பட்டு வந்த அமைச்சரை,அதுவும் பல முக்கிய திட்டங்களை மெட்டிரியலைஸ் பண்ண முயன்று கொண்டிருக்கின்ற ஒருவரை மாற்ற காரணம் என்ன?. இவ்வாறு செய்வது அந்த திட்டங்களை பாதிக்காதா? அல்லது அந்த திட்டங்களுக்கு பாதிப்பு உண்டு பண்ணுவது தான் நோக்கமா?மணிசங்கரின் இடத்தை பிடித்திருப்பவர் முரளி தியோரா. கட்சியின் கஜானாவை பல முறை நிரப்பியவர் என்று புகழ்ச்சி அவருக்கு உண்டு. இப்படி பட்டவர் இந்த துறைக்கு வந்தால் பலன் யாருக்கு போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமேரிக்க தூதர் இந்தியாவில் யார் எதை பற்றி பேசவேண்டும் என்பது பற்றி ஆலோசனை கூறுகிறார்.பிரதமரும் அதை பற்றி விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறார். (இந்த விஷயத்தில் கம்யீனிஸ்ட் மற்றும் பா.ஜ.க ஒரே நிலை எடுத்திருப்பது மிக சுவாரசியமானது).
அமேரிக்கா வெகு வெளிப்படையாகவே வலியுறுத்த இந்தியா அதற்கு வேலைக்காரன் போல பணிவது வேதனையாக உள்ளது. பெற்ற சுதந்திரம் மறைமுகமாக பறிபோகிறதோ?...

No comments: