Wednesday, February 22, 2006

என்ன தான் பேசியிருப்பார்கள்?


கருணாநிதி- என்னய்யா, சொல்ல வேண்டியது எல்லாம் சம்பத் மூலம் சொல்லி முடிச்சுட்ட. சரி கழட்டி விடலாம்னு பார்த்தா கூட்டணியில தொடருவோம்னு சொல்றியே...
வைகோ- நீங்க மட்டும் என்ன திட்டுவதற்கு ஆற்காடு வீராசாமி, எதிர் கட்சி தலைவர்னா அன்பழகன், மத்திய அமைச்சர்னா உங்க பேரன் அப்படின்னு லிஸ்ட் போட்டு வைச்சிருக்கிங்க...
கருணாநிதி- என்னய்யா உங்க் ஆட்கள் 50 தொகுதி கேட்குறாங்க. உங்க கட்சிக்கு அத்தனை ஒட்டு இருக்கா முதல்ல?வைகோ- அலெக்ஸாண்டர் உலகத்தை வெல்லுவேன் என்று சொன்ன போது உலகம் இவ்வாறு தான் கிண்டல் செய்தது. காந்தி சுதந்திரம் பெறுவேன் என்று சொன்ன போது அதனை நிறைய பேர் நம்பவில்லை.வரபோகிற நாட்களில் ஆட்சியை நிர்ணயிக்கின்ற சக்தியாக மதிமுக அமையும்.
கருணாநிதி- அப்படியா , அப்ப உங்களுக்கு 10 சீட் கொடுக்கிறேன்.வைகோ- என்னது 10 சீட்டா?. பொடாவில் ஜெயிலுக்கெல்லாம் போய் விட்டு வந்துருக்கேங்க, கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க.
கருணாநிதி- கட்சியில் இருக்கும் போது மாறனுக்காகவும், ஸ்டாலினுக்காகவும் தியாகம் செய்த நீ, வெளியே சென்ற பிறகாவது எனக்காக தியாகம் செய்ய கூடாதா?
வைகோ- என்னங்க இது கட்சியில் இருக்கும் போது என்னைய வளர விடல. நானே வெளிய வந்து கட்சிஅமைச்சா ஒரு பய ஒட்டு போட மாட்டேங்கிறான். கூட்டணி அமைச்சா நீங்க சீட் தரமாட்டிங்க. அந்த அம்மா பக்கம் போன எனக்கு இருக்கிற ஒட்டும் போய் விடும். என் கட்சி காரன் ஏற்கனவே என்னைய பொடாவில் போட்டத மறந்து விட்டான். எத்தனை சீட் அப்படிங்கிறத கடைசி வரைக்கும் வெளியே சொல்லாதிங்க. அப்ப தான் நான் என் கட்சிகாரனை ஏமாத்த முடியும்.
கருணாநிதி- நீ இழுத்தடிச்சதும் ஒரு விதத்துல நல்லது தான். மத்தவங்க கிட்ட நான் கண்டிப்பாக இருக்க முடியும்.
வைகோ-கூட்டணியில் எங்களுக்கு சீட் இல்லைங்கிறீங்க. ஆனா இன்னமும் நிறைய கட்சியை கூட்டணியில் சேர்க்கிறீங்க .... என்ன திட்டத்தில் இருக்கிறீங்க..கருணாநிதி- என்ன தம்பி.. இன்னமுமா உனக்கு புரியவில்லை. இதயத்தில் அனைவருக்கும் இடம் உண்டு. தேர்தல் கூட்டணியில் தான் இடம் இல்லை.
வைகோ-உண்மையில் உங்கள் இதயத்தில் கூட யாருக்கும் இடம் இல்லை என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்த சொல்ல முடியாத உண்மை.

தொடர்கிறது...

No comments: