Sunday, February 05, 2006

பாக்கியராஜின் அடுத்த படம்.

தமிழக சினிமா வரலாற்றின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்று கருத பட்ட பாக்கியராஜ் பல வரிசையான தோல்விகளுக்கு பிறகு வழங்கும் திரைபடம் பாரிஜாதம். இந்த திரைபடம் பாக்கியராஜ் இயக்குனராக மீண்டும் வலம் வருவாரா என்பதை நிர்ணயிக்கும்.
நாம் தோல்வி அடையும்போது நாம் நம்பிக்கை இழக்காவிடிலும் அடுத்தவர்கள் நமது மேல் நம்பிக்கை இழப்பார்கள். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும் என்றாலும் , சினிமா போன்ற மற்றவர்களின் நம்பிக்கையை பெரிதும் சார்ந்திருக்கிற துறைகளில் ஒரு தோல்வி கடுமையான பாதிப்பை உண்டு பண்ணும் போது தொடர்ச்சியான தோல்விகள் ஒரேடியாக ஆளை கவிழ்த்து விடும் அபாயம் உள்ளது.
எனவே சோதனைகள் பல தாண்டி மீண்டு வரும் பாக்கியராஜிற்கு வெற்றி பெர வாழ்த்துக்கள்.

No comments: