Wednesday, February 08, 2006

எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா

நாமும் ஒரு குத்து பாட்டு எழுதுவது எப்படி.
ஹீரோவை புகழ்ந்து நான்கு வரி, ஹீரோவை உண்மையான ஹீரோ என்று நம்பிக் கொண்டிருக்கிற ஏமாளி இரசிகர்களை நம்பு நான்கு வரி மீதியெல்லாம் சும்மா இடத்தை நிரப்புகிற வரிகள் - எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா என்கிற மாதிரி. இந்த பாடல் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தி கொள்ளலாம்.

கோழி போட்ட முட்டை..
மாம்பழத்து கொட்டை...
எல்லாம் இங்க இருக்கு...
அடி வாங்கி போக பல பேரு..
ஜெயிக்கரவங்க கொஞ்சம் சில பேரு..
என் வெற்றி உன்னோடது...
உன் இதயம் என்னைக்கும் என்னோடது...
நாசாவில் நானும் கொடி கட்டுவேன்...
எட்டு திசையிலும் ஒலிக்கது எம் பேரு.
.தேடி வந்தவுங்க எல்லாம் நிக்க...
நான் ஒடி வந்தேன் உன்னை தேடி...
புலியா பார்த்து போடதே சூடு..
ஆளவந்தவன் நான்..
அட்ரஸ் தெரியாதவன் நீ...
அடங்குடா நீயும்..
என் கூட்டம் திரண்டா எல்லாரும் கால் தூசு..
கோழி போட்ட முட்டை..
மாம்பழத்து கொட்டை...எல்லாம் இங்க இருக்கு...

No comments: