Monday, February 06, 2006

ஜெயலலிதாவை கிறுக்காக்கும் வாய்ப்பை இழந்த கருணாநிதி.

கலைஞரின் திறமைக்கு ஒரு சரியான பரிசோதனை.
கலைஞர் ஜெயலலிதா போட்டி தற்போதைக்கு 2- 2 என்ற அளவில் சமமாக உள்ளது. 1996இல் ஜெயலலிதா கருணாநிதிக்கு சரியான வாய்ப்பு கொடுத்தார். கலைஞர் மீண்டும் 2001இல் அந்த நன்றி கடனை திருப்பி செலுத்தினார். அனைவரையும் போக விட்டு விட்டு தனி பட்ட செல்வாக்கினால் ஜெயித்து விடலாம் என்று அவர் எண்ணியது மிக தவறாக முடிந்தது.
பா.ம.க, காங்கிரசு, தமிழ் மாநில காங்கிரசு மற்றும் கம்ப்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க பக்கம் சென்ற பின்னர் குறைந்த பட்சம் ம.தி.மு.க மட்டுமையாவது தனது பக்கம் வைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் வைகோவை கழட்டி விட, தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவிற்கு தனி பட்ட பெரும்பான்மையினை கொடுத்தது. ம.தி.மு.க குறைந்தது 30 தொகுதிகளில் தி.மு.க வாய்ப்பை நேரடியாக பாதித்தது. இருவரும் இணைந்திருந்தால் 65 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம். ஜெயலலிதா கூட்டணி அரசு அமைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு போயிருப்பார். காங்கிரசு, மூப்பனார், ராமதாஸ் அனைவரும் ஜெயலலிதாவை கிறுக்காக்கியிருப்பார்கள். ஆட்சி இழந்தது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவிற்கு தனிபட்ட பெரும்பான்மை பெற் கலைஞர் செய்த உதவிக்கு ஜெயலலிதா பாராளுமன்றத்தில் நன்றி கடன் செய்தார். இப்போது கலைஞர் பக்கம் வலிமையான கூட்டணி. அதுவே அவருக்கு பலவீனமும் கூட. அனைவரும் அதிர்ப்தியாக வழி உள்ளது. கலைஞர் என்ன செய்ய போகிறார் என்பது இந்த் தேர்தலை நிர்ணயிக்கும். வாசலை திறந்து வைத்து ஜெயலலிதா காத்திருக்கிறார். கட்சிகள் இடம் மாறுமா? காட்சிகள் மாறுமா..

No comments: