Friday, February 03, 2006

விகடனில் ஞானி எழுதியது பற்றி

விகடனில் ஞானி எழுதியது பற்றி.ஞானி நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். இந்த வார விகடனில் அவர் எழுதியுள்ள முக்கியமான கருத்து- சினிமா தயாரிப்பாளர்கள் இனிமேல் தொலை காட்சிகளுக்கு க்ளிப்பிங்ஸ் கொடுக்க போவதில்லை என்பது பற்றி. இந்த மாதிரி நிறைய முறை தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். மாற்றி இருக்கிறார்கள். இந்த முறையும் கொண்டு வந்ததை வெகு சீக்கிரம் மாற்றி விடுவார்கள்.
தயாரிப்பாளர்கள் பிரச்சினை எல்லா சினிமா வட்டாரத்திலும் உண்டு என்றாலும் இங்கே தமிழகத்தில் மிக அதிகம். இதற்கு மூல காரணம்: தயாரிப்பாளர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கேரளாவில் உள்ளது. ஆந்திராவில் உள்ளது. அங்கெல்லாம் ஒன்று நடிகர்களின் சம்பளம் கம்மி. அதிகமாக இருந்தாலும் அட்வான்ஸ் எப்போதும் ஒரு லட்சம் மட்டும். இங்கேயும் ஒற்றுமை இருந்தால் அந்த விதிமுறைகளை கொண்டு வர முடியும். நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூச்சலிட தேவையில்லை.
அட்வான்சாக ஒரு லட்சம் மட்டும் கிடைக்கும் என்று கொண்டு வந்தால் போதும். இவர்கள் தயாரிப்பு செலவு குறையும். பிரச்சினைகள் தானகவே தீரும்.

No comments: