Thursday, January 26, 2006

பூட்டா சிங்கின் ராஜினாமா.

காங்கிரசு வழக்கம் போல அவசரமாக ஒரு அரசை கலைக்க அது எல்லா விதத்திலும் அவர்களுக்கு தர்மசங்கடமாக முடிந்துள்ளது. தற்போது தீர்ப்பு வந்த நிலையில் பூட்டா சிங் ராஜினாமா செய்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது.
காங்கிரசு தேவையில்லாமல் அரசுகளை கலைப்பதை இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கும் என்றே நான் கருதுகிறேன். பீகாரில் காங்கிரசு செய்த தவறு இன்று நன்மையாகவே முடிந்துள்ளது.


1. லாலு காலியானார்.
2. பூட்டாசிங்கும் காலியானார்.
3. கலாம் அடுத்த முறை இந்த தவறினை செய்ய யோசிப்பார்.
4. காங்கிரசு ஆட்சியை கலைக்க தயங்கும்.


No comments: