Sunday, January 29, 2006

22 மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர்.

மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்ய பட்டுள்ளது. இந்த முறை காங்கிரசு 20 மந்திரிகளை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளை காங்கிரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது நடந்து முடிந்த மாநாட்டில் காங்கிரசு கூட்டணி கட்சிகள் பொறுப்பான முறையில் விமர்சனம் செய்ய வேண்டும் என கண்டிப்பான தொனியில் கூறியுள்ளது.
காங்கிரசு கட்டுபாட்டை எடுக்க விரும்புகிறதோ என்ற சந்தேகம் வந்துள்ளது. அடுத்த முறை அல்லது இடை கால தேர்தல் வந்தால் கூட காங்கிரசு தற்போதைய சீட்களை விட கூடுதலாக பெறும் என்ற நம்பிக்கை அதற்கு வந்துள்ளது. மிக நிதானமாக ஆனால் அழுத்தமாக ராகுல் அடுத்த தலைவராக அடையாளம் காட்ட பட்டு விட்டார்.
இத்தனை மந்திரிகள் தேவையா ? நாட்டுக்கு தேவை படாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கு தேவை. அதுவே மந்திரி சபை விரிவாக்கத்திற்கு காரணம்.

No comments: