Thursday, January 05, 2006

யாருக்கு தலைவர்கள்.?

எப்போது கூட்டம் நடந்தாலும் சட்டையை கிழிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் இந்த காட்சியை நடத்தியிருக்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள் முன்பு. இதை கண்டு ஆவேச பட்ட தலைவர் வாசன், இந்த அடிதடி புகைப்படம் எல்லாம் நாளைக்கு பத்திரிக்கையில் வரும். உங்கள் குடும்பாத்திரடம் காட்டி சந்தோஷபடுங்கள் என்று வெடித்துள்ளார்.
1. தொண்டர்கள் யாருமே இல்லை. யாருக்கு தலைவராக இவர்கள் இந்த சண்டை போடுகிறார்கள்?. ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துர என்று ஒரு படத்தில் விவெக் காமெடி காட்டுவது ஞாபகம் வருகிறது.2. எப்போதும் சட்டையை கிழிப்பதற்கு பதிலாக,கிழிந்த சட்டையை போட்டுக் கோண்டு கூட்டத்திற்கு வரலாமே?. புதிய சட்டையை ஏழை எளிய மக்களுக்காவது கொடுக்கலாம்.
தமிழக காங்கிரஸ் கோஷ்டி சண்டைகளை ஒழிக்க வேண்டுமா?. கட்சியை நாலு நாள் ஜெயலலிதா கையில் கொடுக்க வேண்டும்.

1 comment:

ENNAR said...

இந்திய விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் கட்சியின் நிலமை இந்த அளவிற்கு சில குசும்பர்கள் கொண்டு வந்து விட்டார்கள் அதை நினைக்கையில் மனம் வருத்தமாகத்தானிருக்கிறது. இனி காங்கிரஸ் தமிழகத்தில் தேராது போலிருக்கு. காமராஜ் ஆட்சியை எங்கே அமைக்கிறது; இந்த காட்சியை கண்டால் அவர் மனம் எந்த அளவிற்கு வருந்தும் அவரும் இல்லை கக்கன்ஜியும் இல்லை; போங்கள் தொண்டார் இல்லாத கட்சி என மற்றவர் கேவலமாக பேசும்படி செய்து விட்டார்கள்.